கேரளாவில், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆட்சேர்ப்பு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று பேரும் குற்றவாளிகள் என என்.ஐ.ஏ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கேரள மாநிலம் வலப்பட்டினத்திலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை சிரியாவுக்கு அழைத்துச் சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்ததாக மூன்று பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த கொச்சி என்.ஐ.ஏ நீதிமன்றம் 3 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது.
மேலும் குற்றவாளிகள் மூன்று பேருக்குமான தண்டனை வருகிற வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள் நாட்டுக்கு எதிராக போர் தொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.