fbpx

மகளின் இறப்பில் சந்தேகம்..! 2-வது உடற்கூராய்வு கோரி மகளின் உடலை 44 நாட்கள் பாதுகாத்த பெற்றோர்..!

தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வந்த பெற்றோர், 2-வது பிரேத பரிசோதனை செய்யக்கோரி மகளின் உடல் மீது உப்பைக் கொட்டி 44 நாட்களாக பாதுகாத்து வந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நந்துர்பார் பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவரின் உடல் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இந்நிலையில், மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்திருந்தார். தனது மகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தந்தை குற்றம்சாட்டி வந்தார். பின்னர், இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், சிறப்பு மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, இளம்பெண்ணின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை எனக்கூறி, உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மகளின் இறப்பில் சந்தேகம்..! 2-வது உடற்கூராய்வு கோரி மகளின் உடலை 44 நாட்கள் பாதுகாத்த பெற்றோர்..!

இந்நிலையில், இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை எனக்கூறி இளம்பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உள்பட போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே, உடற்கூராய்வு முடிந்து தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பெண்ணின் உடலை குழிதோண்டி அவற்றில் உப்புக் கொட்டி பாதுகாத்து வந்துள்ளனர். தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார் என்பதை நிரூபிக்க, 2-வது பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, மகளின் உடலை 44 நாட்களாக உப்பைக் கொட்டி பாதுகாப்பு வந்துள்ளனர். இந்நிலையில்தான் அப்பெண்ணின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய அதிகாரிகள் ஒப்புக்கொண்டு மும்பைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

Chella

Next Post

சூப்பர் நியூஸ்..; தமிழக அரசு நெசவாளர்களுக்கு வழங்கும் 50% மானியம்...! உடனே விண்ணப்பிக்கவும்...!

Sat Sep 17 , 2022
சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள சாதாரண விசைத்தறி நெசவாளர்கள்‌ 50% மானியத்துடன்‌ மின்னணு பலகை பொருத்தும்‌ திட்டத்தில்‌ பயன்பெற விண்ணப்பிக்கலாம்‌. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டிலுள்ள சாதாரண விசைத்தறிகளில்‌ உற்பத்தி செய்யும்‌ போது நூலிழைகள்‌ அறுந்து, உற்பத்தி நேரம்‌ குறைவதாலும்‌, தொழிலாளர்களின்‌ உற்பத்தி திறன்‌ குறைவதாலும்‌, இதனைச்‌ சீரமைத்து, உற்பத்தி திறனை அதிகரிக்க விசைத்தறிகளுக்கு 50% மானியத்துடன்‌ மின்னணு பலகை பொருத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு […]

You May Like