fbpx

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பிரபல ஓட்டல் உரிமையாளர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

பிரபல ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றான ரேடிசன் ப்ளூ (Radisson Blu)-க்கு உலகம் முழுவதும் பல கிளைகள் உள்ளன. இந்த ஹோட்டலின் உரிமையாளர் அமித்ஜெயின் டெல்லியின் காமன்வெல்த் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். இது குறித்த தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, மேக்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பிரபல ஓட்டல் உரிமையாளர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

முதல் கட்ட தகவல் அறிக்கையில், காமன்வெல்த்தில் உள்ள அழைப்பாளரின் வீட்டிற்கு ஜெயின் சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை நவம்பர் 19ஆம் தேதி காலை நொய்டாவில் உள்ள தனது புதிய வீட்டில் காலை உணவை சாப்பிட்டுவிட்டு காமன்வெல்த் வீட்டிற்கு வந்த அமித்ஜெயின், விரைவில் தனது குடும்பத்துடன் தனது புதிய வீட்டிற்கு மாற உள்ளதாக தெரிவித்திருந்தார். காஜியாபாத்தில் உள்ள தனது அண்ணன் கரனை அவரது அலுவலகத்தில் இறக்கிவிட்டு காமன்வெல்த் வீட்டிற்கு தனியாக சென்றதை டெல்லி காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த பிரபல ஓட்டல் உரிமையாளர்..!! விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!

அடுத்த சில மணி நேரத்தில் வேறு சில பொருட்களை எடுக்க CWG கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்த ஜெயின் மகனும் அவர்களது ஓட்டுநரும் ஜெயின் தூக்கில் தொங்கிய நிலையில், இருப்பதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு மேலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Chella

Next Post

கோவை : அடுத்தடுத்து நிகழும் குண்டு வெடிப்புகள்.. வாகன பரிசோதனையில் காவல்துறையினர்..!

Sun Nov 20 , 2022
கோவை மாவட்ட பகுதியில் உள்ள உக்கடத்தில் சென்ற மாதம் 23 ஆம் தேதி கார் வெடித்து சிதறியது. இதனை தொடர்ந்து அந்த காரில் பாஸ்ராஸ், குண்டு, ஆணி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதனை பார்க்கும் போது இது திட்டமிட்ட சதி என்று தெரியவந்துள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தற்போது கர்நாடாக மாநில பகுதியில் உள்ள மங்களூரில் ஆட்டோ ஒன்றில் […]

You May Like