fbpx

கூட்டு பலாத்கார நாடகம் … காசியாபாத் பெண்ணை கைது செய்தது போலீஸ்

டெல்லியில் பெண் ஒருவர் கடத்தி கூட்டுபலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில் அது ஒரு நாடகம் என உறுதியாகி உள்ளது.

டெல்லியில் 36 வயதான பெண் உத்தரபிரதேச மாநிலம் காசியாபத்திற்கு சென்றபோதுஅவரை 5 நபர்கள் கடத்தி 2 நாட்கள் வைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்டதாகவும், சாக்கு மூட்டையில் கட்டி காரிலிருந்து வீசப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் டெல்லி மகளிர் ஆணையம் தலையிட்டு விசாரணை நடத்தியது.
புகாரின்பேரில் 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை கூட்டு பாலியல் பலாத்காரம் என கூறியது நாடகம் தான் என்பதுவிசாரணையில் தெரியவந்துள்ளது.
நீண்டகாலமாக இந்த பெண்ணுக்கும் வேறு ஒரு குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. எனவே நிலத்தை அபகரிக்க அந்த பெண் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாலியல் பலாத்கார நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்.
தனது எதிர்தரப்பினரை சிக்க வைக்க இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். மருத்துவமனையில் பெண்ணிற்கு பரிசோதனை செய்ததில் , பாலியல் வன்கொடுமைக்கான அடையாளங்கள் இல்லை எனவும் , அந்த பெண் தனது உறவினர்கள் வீட்டில் இருந்ததை அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் அப்பெண் பலாத்காரம் செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கைதான 4 பேரும் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகின்றது.

Next Post

மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து ரிப்போர்ட்டர் பலி ...

Sun Oct 23 , 2022
சென்னை ஜாபர்கான் பேட்டையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டபள்ளத்தில் தவறி விழுந்து படுகாயம்அடைந்து சிகிச்சை பெற்று வந்த தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தங்கி புதியதலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தவர் முத்துக்கிருஷ்ணன் .இளம் வயதான இவர் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ம் தேதி அவர் தங்கும் இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஜாபர்கான்பேட்டையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது. […]

You May Like