fbpx

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம்..!! சாலையோரத்தில் கிடந்த சடலங்கள்..!! திகில் சம்பவம்

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் 8 மாதக் குழந்தை அரூஹி தேரி, அவரது பெற்றோர் ஜஸ்லீன் கவ்வுர் (27) அவரது கணவர் ஜஸ்தீப் சிங் (36), இவர்களது உறவினர் அமன்தீப் சிங் (39) ஆகியோர் வடக்கு கரோலினாவின் மெர்சட் கவுன்டியில் இருந்து கடத்தப்பட்டனர். இதனையடுத்து, மெர்சட் கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல்போன குடும்பத்தினரை தேடி வந்தனர்.

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பம்..!! சாலையோரத்தில் கிடந்த சடலங்கள்..!! திகில் சம்பவம்

இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலை ஒட்டிய ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அருகிலிருந்த விவசாய நிலத்தில் விவசாயம் செய்துகொண்டிருந்த நபர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார் 4 பேரின் சடலத்தையும் மீட்டனர். இந்தக் கடத்தல் தொடர்பாக ஜீஸஸ் மேனுவல் சால்கடோ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கடத்தல் சம்பவம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்துவதாக கவுன்டி ஷெரீஃப் வெர்ன் வார்ன்கே தெரிவித்துள்ளார். கொலையான குடும்பத்தின் பூர்வீகம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம்.

Chella

Next Post

காளை மாட்டின் மீது வந்தே பாரத் ரயில் மோதி முன்பக்கம் தகர்ந்தது…

Thu Oct 6 , 2022
குஜராத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அதிவேக ரயில் வண்டி காளைமாட்டின் மீது மோதி விபத்து ஏற்பட்டதில் முன்பக்கம் தகர்ந்தது. குஜராத்தின் காந்திநகர் மற்றும் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையை இணைக்கும் 3-வது வந்தேபாரத் ரயில் சேவை செப்டம்பர் 30ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில் காலை 11 மணி அளவில் பத்வா மற்றும் மணி நகர் ரயில் நிலையத்திற்கு அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது மாடுகள் குறுக்கே வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்தில் ரயிலின் […]

You May Like