fbpx

#Job; BOB வங்கியில் வேலை வாய்ப்பு…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager உள்ளிட்ட பணிகளுக்கு என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 5 ஆண்டுகள் தேவை.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,60,000 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 600 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 100 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: Bank of Baroda – Personal Banking, NetBanking, Corporate Banking, NRI Banking Services Online

Also Read: தமிழகமே… உச்சகட்ட பரபரப்பில் அதிமுக தலைமை… இன்று 9 மணிக்கு தீர்ப்பு…! வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை முக்கிய அறிவிப்பு…!

Vignesh

Next Post

ஒரே நாளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு..! மத்திய சுகாதாரத்துறை தகவல்...!

Mon Jul 11 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 16,678 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 26 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 14,629 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like