காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக பனியின் வெள்ளை போர்வையால் போர்த்தப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கும் ரயிலின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட இந்தியாவில் தற்போது கடும் குளிர் நிலவி வரும் நிலையில், ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த வீடியோவில் “பனி நிறைந்த காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக ஒரு ரயில் செல்வதைக் காணலாம். அந்த இடம் பனியின் வெள்ளை போர்வையால் போர்த்தப்பட்டிருப்பது போல் காட்சியளிக்கிறது. ரயில் பனிஹால் வழியாக பத்காம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
![இந்தியாவில் இப்படி ஒரு இடமா..? நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்திய அழகிய வீடியோ..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/01/Twitter_Video_Jammu_and_Kashmir_Train_1673002397091_1673002406798_1673002406798.jpg)
ரயில்வே அமைச்சகம் பகிர்ந்த இந்த அழகிய வீடியோவை இதுவரை 348.7K பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். பல ட்விட்டர் பயனர்கள் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.