fbpx

78 வயதில் மலர்ந்த காதல்..!! மகன்கள், மருமகள்களின் சம்மதத்துடன் திருமணம்..!!

கேரளாவில் மகன்கள் மற்றும் மருமகள்களின் முழு சம்மதத்துடன் 78 வயது நபர் மீண்டும் திருமணம் செய்து கொண்டார்.

கேரள மாநிலம் திருவெல்லா பகுதியைச் சேர்ந்தவர் சோமன் நாயர். 78 வயதான இவர், விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனது 65 வயது நண்பருக்கு பெண் பார்க்கச் சென்ற போது சோமன் நாயர் பீனா குமாரியைச் சந்தித்துள்ளார். பீனா குமாரிக்கு ஒரே ஒரு மகள். அவர் வெளிநாட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். தனது கணவனை இழந்த பீனா குமாரி, மகள் வெளிநாட்டில் உள்ள நிலையில் தனியாக வசித்து வந்தார்.

78 வயதில் மலர்ந்த காதல்..!! மகன்கள், மருமகள்களின் சம்மதத்துடன் திருமணம்..!!

சோமன் நாயரின் மனைவி ஓராண்டுக்கு முன் இறந்துவிட்டார். பீனா குமாரியின் கணவர் 10 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். பீனா குமாரியின் சகோதரர் ப்ரவீன், சகோதரியின் மறுமணத்திற்கு அனைத்து முயற்சிகளையும் எடுத்தும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், நண்பருக்காக பீனா குமாரியை பெண் பார்க்கச் சென்ற சோமன் நாயருக்கும் பீனா குமாரிக்கும் காதல் மலர்ந்து, இருவரும் ஒருவருக்கொருவர் பேசி முடிவு செய்து குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இரு வீட்டாரும் ஒப்புக்கொண்ட நிலையில், இவரது திருமணம் கடந்த 24.11.2022 அன்று நடைபெற்றது. திருமணத்தை சோமன் நாயரின் மூத்த மகள், மருமகன் ஆகியோர் முன்னின்று ஏற்பாடு செய்து நடத்தினர்.

Chella

Next Post

TRP-யில் படு அடி வாங்கிய சீரியல்கள்..!! விஜய் டிவி எடுத்த அதிரடி முடிவு..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!!

Wed Nov 30 , 2022
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கட்டிப்போட்டுள்ள விஜய் டிவி சீரியல்கள் மூலமும் தாய்மார்களின் வரவேற்பை பெற்றுள்ளனர். சீரியல் என்றாலே சன் தொலைக்காட்சி தான் என்ற பார்வை மாறி இப்போது மக்கள் விஜய் டிவி, ஜீ தமிழ் என நிறைய பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, தொலைக்காட்சிகளிலும் தரமான தொடர்களை ஒளிபரப்புவதில் மிகுந்த கவனம் […]

You May Like