fbpx

மாமியார் விருந்துன்னா சும்மாவா..? வாயடைத்துப் போன மருமகன்..!! 173 வகையான உணவுகளை பரிமாறி அசத்தல்..!!

ஹைதராபாத்தைச் சேர்ந்த ப்ரித்வி குப்தா என்பவர் சங்கராந்தியை முன்னிட்டு தனது மனைவி ஹாரிகாவுடன் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். திருமணம் ஆன பின் முதல்முறையாக வீட்டுக்கு வந்திருக்கும் மருமகனை பாசத்தோடு வரவேற்ற மாமியார் சந்தியா, 173 வகையான உணவுகளை மருமகனுக்காக தயார் செய்தார். அந்தவகையில், சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, அப்பளம், வடகம் வடை, பாயாசம், ஜிலேபி, மைசூர் பாக்கு, லட்டு, வெற்றிலை பஜ்ஜி, கீரை வடை, வெங்காய வடை, வெங்காய பஜ்ஜி, தயிர் மோர் என்று அந்த பட்டியல் நீண்டது. உணவுகளை தயார் செய்த மாமியார் சந்தியா அவற்றை மருமகனுக்கு மகளுக்கும் பரிமாறினார்.

மாமியார் விருந்துன்னா சும்மாவா..? வாயடைத்துப் போன மருமகன்..!! 173 வகையான உணவுகளை பரிமாறி அசத்தல்..!!

அனைத்து உணவுகளையும் சாப்பிட வேண்டுமா? என்று மனைவி ஹாரிகாவிடம் ப்ரித்வி கேட்டார். கண்டிப்பாக சாப்பிட்டே ஆக வேண்டும் என்று மனைவி கூற மாமியார், மாமனார் பார்த்து கொண்டிருக்க புது மருமகன் 173 வகை உணவுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ருசி பார்த்தார். இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Chella

Next Post

மகனுடன் பேசிவிட்டு குளிக்கச் சென்ற நேரத்தில் மரண செய்தி..!! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

Tue Jan 17 , 2023
கனடாவில் இருக்கும் மகனிடம் பேசிவிட்டு குளிக்கச் சென்ற தாய், குளித்துவிட்டுத் திரும்பி வந்தபோது தன் மகன் உயிருடன் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் Taren Lal (17) என்ற இளைஞர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அவரது கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், […]
மகனுடன் பேசிவிட்டு குளிக்கச் சென்ற நேரத்தில் மரண செய்தி..!! அதிர்ச்சியில் உறைந்த தாய்..!!

You May Like