fbpx

’இவரை தவிர வேறு யாராலும் முடியாது’..! மல்லிகார்ஜுனா கார்கே பரபரப்பு கருத்து..!

காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி மீண்டும் செயல்பட வேண்டும் என்று மல்லிகார்ஜுனா கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் திடீரென விலகியது அக்கட்சியினருக்கு பெரும் அதிர்வலையை கொடுத்தது. அதன் பிறகு ராகுல் காந்தியை குலாம் நபி ஆசாத் கடுமையாக விமர்சித்திருந்தார். இது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

’இவரை தவிர வேறு யாராலும் முடியாது’..! மல்லிகார்ஜுனா கார்கே பரபரப்பு கருத்து..!

இந்நிலையில், இதுகுறித்து மல்லிகார்ஜுனா கார்கே கூறுகையில், “காங்கிரஸ் கட்சியில் ஒருவர் தலைவராக இருக்க வேண்டுமானால் அவர் குமரி முதல் காஷ்மீர் வரை அறிந்தவராக இருக்க வேண்டும். நாடு முழுவதும் ஆதரவை பெரும் தகுதி இருக்க வேண்டும். அவ்வாறு உள்ள ஒருவர் ராகுல்காந்தி மட்டும்தான். அவருக்கு மாறாக யார் இருக்க முடியும், வேறு யாராலும் முடியாது. எனவே, ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

நூதன மோசடி.. ஐ.ஏ.எஸ் அதிகாரியின் வாழ்க்கையை புரட்டிப் போட்ட 16 வினாடி நிர்வாண வீடியோ கால்..

Sat Aug 27 , 2022
இந்த டிஜிட்டல் யுகத்தில் பணத்தை திருடவும், தகவல்களை திருடவும் சைபர் குற்றவாளிகள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர்.. அந்த வகையில், தற்போது நிர்வாண வீடியோ கால், சைபர் குற்றவாளிகளின் முக்கிய உத்தியாக மாறி வருகிறது.. மக்களை அச்சுறுத்துவதற்காக மார்பிங் செய்யப்பட்ட படங்களை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். கடந்த 18 மாதங்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் இதுபோன்ற சம்பவம் நடந்தது. 16 வினாடி வீடியோ அழைப்பு அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் […]
வாட்ஸ்

You May Like