ஒடிசாவில் இளைஞர் மிரட்டலுக்கு பயந்து 11ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் குத்ரா மாவட்டத்தின் பத்மாபூரில் உள்ள தனது வீட்டில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்றிரவு விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் நிராகர்பூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கஜூரிபாடாவை பகுதியைச் சேர்ந்த ஷாசாப் சாஹா என்ற இளைஞர் தனது புகைப்படங்களை வைத்திருப்பதாகவும், அவற்றை சமூக வலைதளங்களில் பகிரப்போவதாகவும் தன்னை மிரட்டியதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். மேலும், நான் கல்லூரிக்கு செல்லும் போது, தன்மேல் ஆசிட் அடிப்பதாகவும் அந்த இளைஞர் தன்னை மிரட்டியதாக மாணவி புகாரில் உள்ளதாக கூறப்படுகிறது.
![இளைஞருக்கு பயந்து விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட பிளஸ்1 மாணவி..!! நடந்தது என்ன..?](https://1newsnation.com/wp-content/uploads/2022/08/Death.jpg)
இந்நிலையில், மாணவி தற்கொலை செய்த செய்தியை அறிந்த இளைஞர், வெளியூருக்கு தப்பியோடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மாணவி தற்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷாசாப் என்ற இளைஞர் தலைமறைவாக உள்ள நிலையில், அந்த இளைஞரின் தந்தை முர்தாசா சாஹா (55), தாய் பேகம் பீபி (45), சகோதரர் அர்ஷாத், சகோதரிகள் அப்சானா, அஸ்மா பேகம் மற்றும் உறவினர் ரிஹானா பீபி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை அந்த இளைஞர் சமூக வலைதளங்களில் பகிரப்படவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அந்த சிறுமியின் தவறான புகைப்படங்கள் அந்த இளைஞரிடம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.