fbpx

கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி..!! நடந்தது என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தன் கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து மாணவி ஒருவர் கீழே குதித்து, தற்போது உயிருக்கு போராடி வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் முகர்ஜி நாகர் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவிக்கு, டேட்டிங் செயலி வாயிலாக ஒரு இளைஞர் அறிமுகமாகி உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையிலான பழக்கம் நாளடைவில் நெருக்கமானது. இந்நிலையில், தன் வீட்டிற்கு வருமாறு கல்லூரி மாணவியை இளைஞர் கேட்டுக்கொண்டார். அதன்படி, அந்த இளைஞரின் வீட்டிற்கு மாணவி சென்றுள்ளார். அங்கு இளைஞர் தன் நண்பர்கள் உடன் மது அருந்திக்கொண்டு இருந்ததாகவும், மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாணவியை இளைஞர்களின் நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகிறது.

கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவி..!! நடந்தது என்ன..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்நிலையில், தன் கற்பை காப்பாற்ற 4-வது மாடியிலிருந்து மாணவி கீழே குதித்துள்ளார். அதன்பின் ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவி சிகிச்சைப் பெற்று வருகிறார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர், கொலை வழக்குப்பதிவு செய்து இளைஞர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

பொங்கல் பரிசு ரூ.1,000..!! இதை செய்தால்தான் உங்களுக்கு பணம் கிடைக்கும்..!! எளிய டிப்ஸ் இதோ..!!

Sun Dec 25 , 2022
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அடுத்தாண்டு (2023) பொங்கல் பண்டிகைக்கு அரசு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பு குறித்து அண்மையில் அறிவிப்பு வெளியானது. ஜனவரி 2ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும், இலங்கை வாழ் தமிழர்கள் குடியிருப்பு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை உடன் ரூ.1,000 […]

You May Like