இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிப்ரவரி மாதம் ரேஷன் கடைகளில் இரு முறை ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 8-ம் தேதி ஹோலிப்பண்டிகை வர இருப்பதால் அதற்கு முன்னதாக இலவச ரேஷன் பொருட்களை இருமுறை பெற்றுக் கொள்ளலாம்.
கடந்த 20-ம் தேதி முதல் இலவச கோதுமை மற்றும் அரிசி விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இலவச அரிசி மற்றும் கோதுமை விநியோகம் வரும் 28ஆம் தேதி வரை அமலில் இருக்கும். மேலும் இதற்குள் பொதுமக்கள் மக்கள் ரேஷன் கடைகளில் இலவச அரிசி மற்றும் கோதுமையை பிப்ரவரி மாதத்தில் இருமுறை பெற்று பயன் பெறலாம் என உத்தரப்பிரதேச அறிவித்துள்ளது.