fbpx

திருட வந்த இடத்தில் வீட்டுக்காரியை திணற வைத்த கும்பல்..!! கணவன் கண்முன்னே நடந்த பகீர் சம்பவம்..!!

கொள்ளையடிக்க வந்த 4 பேர் கொண்ட கும்பல் கணவன் முன்னே மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஜேதுசிங் (47) என்பவர் அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 45 வயதில் மனைவி இருக்கிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு, ஜேது சிங் மற்றும் அவரது மனைவி சாப்பிட்டு விட்டு உறங்க சென்றுள்ளனர். அப்போது யாரோ கதவை தட்டுவது போல் சத்தம் கேட்டுள்ளது. அந்த சமயத்தில் யாரென்று பார்ப்பதற்காக ஜேதுசிங் கதவை திறந்துள்ளார். அப்போது வெளியே நின்று கொண்டிருந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை தாக்கி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

திருட வந்த இடத்தில் வீட்டுக்காரியை திணற வைத்த கும்பல்..!! கணவன் கண்முன்னே நடந்த பகீர் சம்பவம்..!!

மேலும், வீட்டினுள் சென்று அவரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.1,400 பறித்துள்ளனர். அதோடு வீட்டில் வேறேதும் பொருள் இருக்கிறதா என்று கேட்கையில் எதுவும் இல்லை என்று கத்தி கூச்சலிட்டுள்ளார். மேலும் வீட்டில் தேடி தேடி பார்த்து அங்கே இருந்த வெள்ளிப் பொருட்களை திருடியுள்ளனர். மீதமுள்ள பொருட்கள், பணம் எங்கே என்று கேட்டு ஜேதுசிங்கை கட்டிப்போட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். இதைக் கண்டு ஜேதுசிங்கின் மனைவி கத்தியுள்ளார். இதையடுத்து இந்த கொள்ளை சம்பவத்தை வெளியே சொல்லக்கூடாது என்று கூறி, ஜேதுசிங்கின் மனைவியின் கை, கால்களை கட்டி கணவன் கண்முன்னே மனைவியை அனைவரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அனைவரும் தப்பியோடியுள்ளனர்.

திருட வந்த இடத்தில் வீட்டுக்காரியை திணற வைத்த கும்பல்..!! கணவன் கண்முன்னே நடந்த பகீர் சம்பவம்..!!

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஜேதுசிங் மற்றும் பாதிக்கப்பட்ட அவரது மனைவி அருகிலிருந்த காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு, அப்பகுதி சிசிடிவியை ஆய்வு செய்து குற்றம்சாட்டப்பட்ட கும்பலை தேடி வந்தனர். தற்போது அதில் 3 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவனை மட்டும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Chella

Next Post

குடும்ப அட்டைதாரர்களுக்கு செம குட் நியூஸ்..!! பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 ரொக்கம் பரிசு..!!

Sun Nov 13 , 2022
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 வழங்குவது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும். ஆனால், கடந்த முறை முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு […]

You May Like