fbpx

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை ஸ்லோ பாய்சன் கொடுத்து கொன்ற மனைவி! போலீசில் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சார்ந்த 45 வயதான தொழிலதிபர் கமல்காந்த் ஷா, இவர் சென்ற செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக, மரணமடைந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அந்தேரியில் இருக்கின்ற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அந்தேரி மருத்துவமனையில் இருந்து மும்பை மருத்துவமனைக்கு சென்ற செப்டம்பர் மாதம் 3ம் தேதி திடீரென்று மாற்றப்பட்டார். அங்கே சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி பலியானார்.

இவருடைய மரணம் தொடர்பாக சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கும் கமல்காந்தின் சகோதரிக்கும் சந்தேகம் ஏழத்தொடங்கியது. இதற்கு காரணம் என்னவென்றால், கமல்காந்தின் ரத்தத்தில் இயல்புக்கு மாறாக ஆர்சனிக் மற்றும் தாலியம் உள்ளிட்ட தாதுக்கள் கலந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே சந்தேகமடைந்த டாக்டர்கள் அதனை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறையினருக்கும் புகார் வழங்கி உஷார் படுத்தினர்.

மேலும் கமல்காந்தின் மனைவி மீதும் சந்தேகம் உள்ளதாக அவருடைய சகோதரியும் புகார் வழங்கினார். இவற்றை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் செய்த விசாரணையில் உண்மை வெளியாகியிருக்கிறது.

கமல்காந்தக்கும் காஜல் என்பவருக்கும் சென்ற 2002 ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. திருமணமாகி சுமார் 20 ஆண்டுகள் சென்ற நிலையில், அண்மைக் காலமாகவே காஜலுக்கும், கமல் காந்திற்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

காஜலுக்கு ஹிதேஷ் என்ற நபருடன் திருமணத்தை தாண்டிய முறை தவறிய உறவு இருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் தன்னுடைய கணவர் கமல் காந்துக்கு தெரிய வந்தவுடன், இதுவும் அவர்களுடைய ஏற்படும் தகராறு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

இந்த நிலையில், தன்னுடைய காதலன் ஹிதேஷுடன் ஒன்றிணைந்து கணவர் கமல்காந்தை கொலை செய்துவிட்டு, சொத்துக்களை தன்வசப்படுத்த காஜல் திட்டம் வகுத்துள்ளார். இதனடிப்படையில் இருவரும் ஆர்சனிக் மற்றும் தாலியம் தாதுக்களை வாங்கியுள்ளதாக தெரிகிறது.

அந்த தாதுக்களை காஜல் தான் சமைக்கும் உணவில் கலந்து ஸ்லோ பாய்சன் முறையில் தன்னுடைய கணவருக்கு வழங்கியுள்ளார். இதனை உட்கொண்ட கமல்காந்த் உடல் நலக்குறைவு உண்டாகி பலியாகியுள்ளார். அத்துடன் கமல் காந்தின் தாயாரும் சில மாதங்களுக்கு முன் இதே முறையில் உயிரிழந்ததால், அவருடைய மரணத்திற்கு பின்னாலும் காஜல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் மும்பை காவல்துறை காஜல் மற்றும் அவருடைய காதலன் ஹிதேஷ் உள்ளிட்டோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்திருக்கிறார்கள்.

Kathir

Next Post

திருடன் என நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரி அடித்து கொலை!

Mon Dec 5 , 2022
திருச்சி சிரஞ்சீவி நகர் ஏ ஆர் கே நகரைச் சார்ந்தவர் திரேந்தர்(42) இவர் மணிகண்டம் பகுதியில் மர அறுவை மில் நடத்தி வருகின்றார். இந்த பகுதியில் இருக்கின்ற வேப்ப மரத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கயிற்றால் கட்டப்பட்ட ஒரு இளைஞர் நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது தொடர்பான தகவல் கிடைத்தவுடன் மணிகண்டன் காவல்துறை ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவல் துறையைச் சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

You May Like