பாலியல் பலாத்காரத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றி கொள்ள 30 வயது பெண் ஒருவர் ஓடும் பேருந்தில் இருந்து குதித்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த புதன்கிழமை அதிகாலை பேருந்தில் சென்ற பெண்ணை சில நபர்கள் துன்புறுத்த வந்துள்ளனர். அதிலிருந்து தப்பிக்க பேருந்தில் இருந்து குதித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சம்பவம் பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி இந்தியாவில் மீண்டும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது. காயமடைந்த நேபாள மொழி பேசும் பெண் NH-31 சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டறிந்த போலீசார், அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தல்கோலா காவல் நிலையத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் அதிகாலை 1.30 மணியளவில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் வைஷாலியில் இருந்து சிலிகுரிக்கு அந்தப் பெண் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, 4 பேர் அதில் ஏறியுள்ளனர்.
![ஓடும் பேருந்தில் இருந்து ஜன்னல் வழியே குதித்த பெண்..!! காமக்கொடூரர்களால் அரங்கேறிய சம்பவம்..!!](https://1newsnation.com/wp-content/uploads/2021/08/shutterstock-rape-violence-1024x533.jpg)
அவர்கள் அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டு பாலியல் துன்புறுத்தல் செய்ய துவங்கி உள்ளனர். அந்த பெண் பயந்து பேருந்தின் ஜன்னலில் வழி குதித்ததாக எஸ்பி அமீர் ஜவைத் கூறியுள்ளார். “நாங்கள் அனைத்து கோணங்களிலும் வழக்கை விசாரித்து, பேருந்தை கண்காணிக்க முயற்சிகிறோம். பெண்ணின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் டார்ஜிலிங்கில் வசிப்பவர் மற்றும் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஜனவரி 22ஆம் தேதியன்று ஏதோ வேலைக்காக வைஷாலிக்கு சென்றதாக அந்த பெண் போலீசாரிடம் கூறினார்” என்று எஸ்பி ஜவைத் தொலைபேசியில் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.