fbpx

யூடியூப் வருமானத்தை வைத்து Audi கார் வாங்கிய இளைஞர்..!! மாத வருமானம் எவ்வளவு தெரியுமா..?

பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், யூடியூப் சேனல் மூலம் ரூ.50 லட்சம் Audi காரை வாங்கியிருக்கிறார்.

இன்றைய காலக்கட்டத்தில் யூடியூப் சேனல் மூலம் பலரும் வருமானத்தைப் பெற்று வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்த திறமைகள், தொழில்கள் ஆகியவற்றின் மூலம் யூடியூப் சேனல்களில் வீடியோக்களைப் பதிவிட்டு, லைக்ஸ்களை அள்ளுவதுடன், பார்வையாளர்களையும் பெருக்கி வருமானம் பார்த்து வருகின்றனர். அப்படி ஒரு இளைஞர் தான், யூடியூப் வருமானத்தை வைத்து ஆடி கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.

யூடியூப் வருமானத்தை வைத்து Audi கார் வாங்கிய இளைஞர்..!! மாத வருமானம் எவ்வளவு தெரியுமா..?

பீகாரைச் சேர்ந்த ஹர்ஷ் ராஜ்புட் என்ற இளைஞர் பட்டப்படிப்பு முடித்த கையோடு, திரையில் சாதிக்க வேண்டும் என்ற கனவில் மிதந்ததுடன், அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனால், அப்போதைய கொரோனா ஊரடங்கால் அவரது கனவு சிதைந்துபோனது. பிறகு அதைப்பற்றி கவலைப்படாத அவர், அந்த சமயங்களில் தன் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் சினிமா மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றிய நகைச்சுவையான வீடியோக்களைத் தயாரித்து வெளியிட்டு வந்துள்ளார். அவரது சேனல், கொஞ்ச நாட்களிலேயே வைரல் ஆக ஆரம்பித்தது. அதன் விளைவு, அவருடைய சேனலை இன்று பல லட்சம் பார்த்து வருகின்றனர்.

அதிலும், 33 லட்சம் பேர் அவருடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். குறிப்பாக, அவரது வீடியோ ஒன்றை இதுவரை 2 கோடி பேர் பார்த்துள்ளனர். இதன்மூலம், மாதந்தோறும் அவருக்கு 5-8 லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பதாகவும், அந்த வருவாய் மூலம் தற்போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள ஆடி (Audi A4) சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. மேலும் அவர், பிராண்ட் புரோமோஷன்கள் மூலம் தனியே வருவாய் ஈட்டுவதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஜூன் 2022 முதல் அக்டோபர் 2022 வரை அவருக்கு கூகுள் விளம்பரப் பிரிவில் இருந்து கிடைத்த தொகை சராசரியாக ஒரு மாதத்துக்கு ரூ.4.5 லட்சம் எனவும் கூறப்படுகிறது.

Chella

Next Post

செல்போனில் பேசியதால் ஏற்பட்ட சோகம்.. மின்சாரம் தாக்கி பலத்த காயமடைந்த மாணவி..!

Wed Jan 18 , 2023
கல்லூரி பெண் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதி அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகிலேயே துணை மின் நிலையத்துக்குச் செல்லும் உயர் அழுத்த மின்சார கம்பி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த பெண் தனது தொலைபேசியை சார்ச் செய்து விட்டு வேலை குறித்து உரையாடிக் கொண்டிருந்ததாக தெரியப்படுகிறது.  அங்கே காய்ந்து கொண்டிருந்த ஆடை ஒன்று மின்சார கம்பியின் மீது விழுந்ததையடுத்து அதை எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, உயர் […]
திமுக ஆட்சிக்கு வந்தால் கூடவே மின்வெட்டும் வந்துவிடும்...! முன்னாள் எம்.எல்.ஏ. பரபரப்பு குற்றச்சாட்டு..!

You May Like