“கிட்ட வந்த பீர் பாட்டில உடைச்சு குத்திடுவேன்”!மிரட்டிய ரவுடி!பயந்து ஓடிய போலீஸ்!

திருவள்ளூர் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினரை இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சார்ந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்திவிடுவேன் என்று சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பூட்டி கிடந்த இரும்பு கடையில் இருந்து சிலர் இரும்பை திருடி சென்றுள்ளனர். இதனைக் கண்ட காவலாளி அவர்களை பிடிக்க சென்றபோது காவலாளியின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த விசாரணை தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் இலங்கை மறுவாழ்வு மையம் முகாமைச் சார்ந்த ராபின்சன் என்பவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போதையிலிருந்த ராபின்சன் பீர் பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்துவதற்காக பாய்ந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரிடம் இருந்து ஓடி தப்பித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளியை பிடிக்க சென்ற இடத்தில் காவல்துறையே ஓட்டம் எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

1newsnationuser5

Next Post

பிஜேபி இளைஞர் அணி மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல்! காவல்துறை வலைவீச்சு !

Wed Mar 15 , 2023
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிஜேபியைச் சார்ந்த இளைஞர் அணி வீரர்கள் இருவர் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் என்ற பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியில் இருப்பவர்கள் தினேஷ் மற்றும் விஷ்ணு. நேற்று இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து இவர்கள் இருவரையும் தாக்கினர். இச்சம்பவத்தால் பகுதியில் பெரும் பதற்றம் […]
IMG 20230315 WA0087

You May Like