புதிய உருமாறிய கொரோனாவின் தாக்கம் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. சீனா மட்டும் இல்லாமல் பல நாடுகளிலும் தோற்று பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.
அதன்படி சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, ஜனவரி 1முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு, விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகடிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த 6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.