பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச் சங்கம், தேசிய ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் (இஎம்ஆர்எஸ்) கலாச்சார விழாவை 2022, இன்று முதல் நவம்பர் 2 வரை கர்நாடகாவின் பெங்களூருவில் நடத்தவுள்ளது.
இந்த நிகழ்ச்சியை, கர்நாடக உறைவிடக் கல்வி நிறுவனங்கள் சங்கம், சர்வதேச வாழும் கலை மையத்தில் நடத்துகிறது. இந்த விழாவில் மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் க்ஷ ரேணுகா சிங் சாருதா கலந்துகொள்கிறார்.இந்தக் கலாச்சார நிகழ்வில் நாடு முழுவதும் உள்ள 1500க்கும் அதிகமான ஏக்லவ்யா மாதிரி உறைவிடப் பள்ளிகளின் மாணவர்கள் கலந்துகொள்வார்கள்