இரவில் லைட் போட்டுத் தூங்கவே கூடாது!. உடலுக்கு மோசமான ஆபத்து!. இருட்டின் அவசியத்தை தெரிஞ்சுக்கோங்க!.

light sleep 11zon

நம்மில் பல பேர் இந்த தவறை செய்வது உண்டு. தூங்கும் போது கூட விளக்குகளை போட்டுக் கொண்டு தூங்குவது உண்டு. ஆனால் உண்மையில் ஒளியானது தூக்கத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. தூங்குவதற்கு இருள் என்பது மிகவும் அவசியம். இருட்டாக இருக்கும் போது உங்கள் உடல் சமிக்ஞைகளை அனுப்பி தூக்கத்தை தூண்டுகிறது. அதிக வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் உண்டாகிறது.


இன்றைய நாகரீக உலகில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் தொலைக்காட்சி பயன்பாடுகள் என்பது அதிகமாக உள்ளது. ஒரு நாளில் 24 மணி நேரமும் செயற்கை ஒளி மூலங்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். விலங்குகள் மற்றும் மனிதர்களில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இரவில் அதிக வெளிச்சம் பார்ப்பது உடல் பருமனை உண்டாக்குகிறது என்கிறது. மேலும் பெரியவர்களில் இதய நோய் ஆபத்தையும் உண்டாக்குகிறது. அதிக வெளிச்சத்தில் தூங்கும் போது உறக்கத்தின் போது இதயத் துடிப்பு அதிகரித்தல், இரத்த குளுக்கோஸ் அதிகரித்தல் போன்றவை உண்டாகிறது.

நம் உடலில் தூக்கத்தை தூண்ட இருட்டு என்பது மிகவும் அவசியம். தூக்கத்தில் ஒளியின் தாக்குதலால் உஃபல் சீர்குலைவது தெரிய வந்துள்ளது. ஏனெனில் நம் உடலானது இருட்டின் போது தான் தூக்க ஹார்மோன் ஆன மெலடோனினை சுரக்கிறது. இதுவே வெளிச்சமானது மெலடோனின் அளவை சீர்குலைக்கிறது. இதனால் பெண்களுக்கு நீரிழிவு நோய் ஆபத்து, உயர் ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒளி நம்முடைய தன்னியக்க நரம்பு மண்டலத்தை தூண்டி ஆரோக்கியமான நிம்மதியான தூக்கத்தின் போது அதை பாதிக்க செய்கிறது. இதனால் உங்கள் தூக்கம் கெட ஆரம்பிக்கும்.

எனவே இரவில் தூங்கும் போது முடிந்த வரை எந்தவொரு வெளிச்சமும் இல்லாமல் அல்லது குறைந்த வெளிச்சத்தில் தூங்க முற்படுங்கள் என்று இந்த ஆய்வு ஊக்குவிக்கிறது. தூங்கும் இடத்திற்கு அருகில் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.இரவு விளக்கு என்றால் கூட கண்களில் வெளிச்சம் படாதவாறு வைக்க வேண்டும். முடிந்த வரை தரைக்கு நெருக்கமாக இரவு விளக்கை வைக்கலாம். தூங்கும் போது ஒளியின் நிறமும் மிகவும் முக்கியமானது. நீல நிற ஒளிக்கு பதிலாக ஆம்பர் அல்லது சிவப்பு நிற ஒளி விளக்குகளை இரவில் பயன்படுத்த வலியுறுத்துகின்றனர்.

Readmore: எடை குறையும்.. நல்லா தூக்கம் வரும்.. இரவில் இதை சாப்பிடுங்க..!! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்..

KOKILA

Next Post

11 முகங்களுடனும் 22 கரங்களுடனும் அருள் புரியும் அபூர்வ முருக பெருமான்..!! எங்கே தெரியுமா..?

Wed Jun 4 , 2025
ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை பகுதியில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில், அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய விஸ்வரூபம் காணப்படும் ஒரே தலம் இதுவாகும். பொதுவாக முருகப்பெருமான் பெரும்பாலான தலங்களில் ஒற்றை முகத்துடன், சில இடங்களில் மட்டும் இரு அல்லது மூன்று முகங்களுடன் காட்சி தருவார். ஆனால் குண்டுக்கரையில், மிகவும் விசித்திரமாக, […]
temple 2

You May Like