ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்த ஆண் குழந்தையை 4 1/2 லட்சம் ரூபாய்க்கு விற்ற வழக்கில் தாய் மற்றும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் காவல்துறை கடந்த வியாழக்கிழமை குழந்தை நாலரை லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்ட வழக்கில் 11 பேரை கைது செய்தது. காவல்துறையின் தகவலின் படி ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தைச் சார்ந்த ஆஷா தேவி என்ற பெண் தனது ஆண் குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே 4 1/2 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி விற்பனை செய்து இருக்கிறார் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அவர்கள் விசாரணையில் இறங்கினர்.
காவல்துறையின் தீவிர விசாரணை காரணமாக விற்கப்பட்ட குழந்தை 24 மணி நேரங்களுக்குள்ளாக பொக்காரோ மாவட்டத்திலிருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தையின் தாய் ஆஷா தேவி மற்றும் இதற்கு புரோக்கர் வேலை செய்த நபர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிரமான விசாரணை நடத்தி வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குழந்தையை விற்பனை செய்வதற்கு 4.5 லட்ச ரூபாய் விலை பேசி விற்பனை செய்துள்ளனர். கிடைத்த பணத்தில் ஒரு லட்ச ரூபாயை அந்த குழந்தையின் தாய்க்கு கொடுத்துவிட்டு மீதி இருந்த 3.5 லட்ச ரூபாயை புரோக்கர்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொண்டுள்ளனர். புத்ககன் என்ற கிராமத்தைச் சார்ந்த ஒரு குடும்பம் குழந்தையை வாங்குவதற்காக இவர்களிடம் விலை பேசியிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து துரிதமாக நடவடிக்கை எடுத்த காவல்துறை இந்த கும்பலை கைது செய்ததோடு அந்த குழந்தையையும் காப்பாற்றியுள்ளது.