ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் இளைஞர் ஒருவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் பெற்றோர்கள் ஏற்பாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி திருமணம் நடைபெற்றது.
அதன் பின்னர் புதுமணத் தம்பதிகளுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த வாலிபர் தன்னுடைய மனைவியுடன் முதலிரவில் இருக்கும் காட்சிகளை அவருடைய மனைவிக்கு தெரியாமல் தன்னுடைய கைபேசியில் ரகசியமாக வீடியோ எடுத்திருக்கிறார்.
அதன் பிறகு அவர் செய்த காரியம் அனைவரும் அருவருக்கத்தக்க ஒரு விஷயமாக இருந்தது. அதாவது, கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்து பெண்ணின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
இது தொடர்பாக புது மாப்பிள்ளை இடம் கேள்வி கேட்டு பெண் வீட்டைச் சார்ந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் அதன் பிறகு ஊர் பஞ்சாயத்தில் இருதரப்பையும் சமாதானம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனாலும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்த புது மாப்பிள்ளையின் தாயே புகார் வழங்கியிருக்கிறார்.
இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புது மாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணம் முடிந்த சில தினங்களிலேயே முதலிரவு காட்சிகளை புதுமாப்பிள்ளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.