செக்…! நில அபகரிப்பு செய்வதை தடுக்க புதிய முறை…! தமிழக அரசு அதிரடி

patta 2025

நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது. ‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


தமிழ்நாடு நில அளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www.tnlandsurvey.tn.gov.in என்ற இணையதளத்தை NIC மூலம் உருவாக்கியது. அதில் பட்டா மாறுதல் “தமிழ் நிலம்” கைப்பேசி செயலி இவ்விணையதளத்துடன் கடந்த 2023-ம் ஆண்டு இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் இணைய வழி சேவை Tamil Nilam Citizen portal bttps://tamilnilam.tn.gov.in/citizen/இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரிவரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்), மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன. இதனை தொடர்ந்து புலப்படங்களிலும் அனைத்து உட்பிரிவு மாற்றங்கள் கொண்டு வர கொலாப்லேண்ட் மென்பொருள் உருவாக்கப்பட்டு இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பட்டா, சிட்டா பார்வையிட மற்றும் சரிபார்க்க, அ-பதிவேடு, அரசு புறம்போக்கு நில விவரம், புலப்படம்/நகர நில அளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட பதிவிறக்கம் மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவை (www.eservices.tn.gov.in) இவ்விணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்கேன் செய்யப்பட்ட கிராம வரைபடங்கள் விற்பனை, தொடர்பு விளக்கப் பட்டியல்கள் விவரங்கள் (correlation statement) போன்றவை பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்கள், வட்டங்கள், கிராமங்கள், மாநகராட்சிகள், நகராட்சிகளின் விவரங்கள், இத்துறையின் முக்கிய அரசாணைகள், சுற்றறிக்கைகள், பரப்பளவு மற்றும் அளவு மாற்றங்கள் போன்றவற்றையும் அறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீர்நிலை, புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் தனியாருக்குப் பதிவு செய்யப்படுவதைத் தடுக்க, பத்திரப் பதிவுத்துறை புதிய வழிமுறையை அறிமுகம் செய்துள்ளது.

‘தமிழ் நிலம்’ தகவல் தொகுப்பில் சிறப்பு குறியீடு வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுக்காக சர்வே எண்ணை உள்ளிடும் போது, அது அரசு நிலமா என்பதை தானியங்கி முறையில் கண்டறிந்து, பதிவைத் தடுக்கும். இதனால், போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்கள் அபகரிப்பு செய்வதை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இணையதளம் மற்றும் “தமிழ்நிலம்” செயலி மூலம் நில அளவைத் தொடர்பான விவரங்களை பார்வையிட்டு பயனடையலாம்.

Read More: இரவோடு இரவாக தமிழகம் முழுவதும் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்…!

Vignesh

Next Post

4 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. விசாரணை நடத்த உத்தரவு!. BSF வீரர்களுக்கு அழுக்கு ரயில் பெட்டிகளை வழங்கிய விவகாரத்தில் அஷ்வினி வைஷ்ணவ் அதிரடி!

Thu Jun 12 , 2025
திரிபுராவில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரை பணிக்காக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் பாழடைந்த மற்றும் அழுக்குப் பெட்டிகளைக் கொண்ட ரயிலில் அழைத்துச் செல்லப்பட்டது தொடர்பான விவகாரத்தில் 4 அதிகாரிகளை இடைநீக்கம் செய்து, விசாரணை நடத்தவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 3ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ம் தேதி வரை 38 நாட்கள் நடைபெற உள்ளது. […]
BSF Train issue minister 11zon

You May Like