நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் நம்பி இருப்பது வங்கி நகைக்கடனை மட்டுமே, அவசர தேவைக்கு நகைகளை அடகு வைத்து பணத்தை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
அதாவது, நகைக்கடன் வாங்குபவர் அதை மீட்கும் தகுதி உடையவராக இருக்க வேண்டும். தங்கத்தின் மீது கடன் வழங்கும்போது, அந்த தங்க நகையின் தரத்தை உறுதிப்படுத்த தரச் சான்றிதழ் வழங்க வேண்டும். குறிப்பிட்ட தங்கங்களை மட்டுமே அடமானமாக ஏற்கப்படும். தங்க நகையை அடமானம் வைக்கும்போது, அதன் உரிமையாளர்களுக்கான ஆதாரத்தைச் சமர்பிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதனால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த நிலையில், நகை அடமானத்திற்கான புதிய விதிகள் அடுத்தாண்டு ஜனவரி வரை ஒத்திவைத்து ஆர்.பி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ஆர்.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரூ.2 லட்சத்திற்கு கீழ் தங்க நகை அடகு வைப்பவர்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது எனவும் கூறப்பட்டது.
Read more: Gold Rate: இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா..? – இன்றைய நிலவரம் இதோ!