டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை திருத்த புதிய தொழில்நுட்பம்..!! அமைச்சர் பிடிஆர் சொன்ன குட் நியூஸ்..!!

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாவதில் கால தாமதம் ஆகி வருவதை அடுத்து இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த நிலையில் இன்னும் அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதப்பட்ட நிலையில், பல மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. இந்நிலையில், இந்த மாதம் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகள் எழுதி பல மாதங்கள் கழித்து முடிவுகள் வருவதற்கு விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கு பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் தான் என்று கூறப்பட்டது. பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை மாற்றி புதிதாக AI Automation என்ற தொழில்நுட்பம் மூலம் விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்

AI Automation தொழில்நுட்ப மூலம் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை மதிப்பீடு செய்தால் ஒரு சில வாரங்களில் தேர்வு முடிவுகள் அறிவித்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்குள் AI Automation தொழில்நுட்பம் மூலம் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் பல தேர்வுகளில் AI Automation தொழில்நுட்பம் மூலம் தான் விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன என்றும் அதேபோல் தமிழகத்தில் இனி வருங்காலத்தில் AI Automation என்ற தொழில்நுட்ப மூலம் விடைத்தாள்கள் திருத்தப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHELLA

Next Post

பிஎஃப் பணம் எடுப்பதில் இவ்வளவு விஷயம் இருக்கா..? தெரியாமல் கூட இந்த டைம்ல எடுத்துறாதீங்க..!!

Thu Apr 20 , 2023
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்தில் சேர்ந்த பின் அவரது பிஎஃப் கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது உங்களது எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பெரும் நிதி மற்றும் சேமிப்பில் பின்னடைவை ஏற்படுத்துகிறது. பிஎஃப் கணக்கை புது நிறுவனத்துடன் இணைப்பதுதான் புத்திசாலித்தனமான வேலை […]
EPFO

You May Like