இந்த 4 ராசி பெண்களை காதலிக்கும் ஆண்கள் அதிர்ஷ்டசாலிகள் தான்.. ஏன் தெரியுமா.!?

பொதுவாக ஒருவருக்கு வாக்குறுதி கொடுத்து விட்டால் அதை காப்பாற்றுவது என்பது மிகவும் சிறந்த பண்பாக கருதப்பட்டு வருகிறது.  ஆனால் பலராலும் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால் இந்த 4 ராசி பெண்களும் கொடுத்த வாக்குறுதியினை காப்பாற்றி உண்மையாக இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் யார் யார் என்பதை குறித்து பார்க்கலாம்?
‌1. மகரம் – ஒழுக்கத்தின் கிரகமான சனி பகவானால் ஆளப்பட்டு வரும் மகர ராசி பெண்கள் பொறுப்பு மற்றும் நேர்மையில் சிறந்து விளங்குபவர்களாக இருந்து வருவார்கள். இத்தகைய பெண்கள் தான் எடுத்த காரியங்களில் பின் வாங்காமல் கண்டிப்பாக சாதித்து காட்டுவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் குணம் இவர்களுக்கு உள்ளது.
‌2. ரிஷபம் – சுக்கிர கிரகத்தினால் ஆளப்பட்டு வரும் ரிஷப ராசியினர் நம்பகத்தன்மைக்கு பெயர் போனவர்கள். எதார்த்தமான மற்றும் நம்பிக்கைக்குறிய குணங்களைக் கொண்ட ரிஷப ராசி பெண்கள் எத்தகைய சூழல் ஏற்பட்டாலும் கொடுத்த வாக்கினை கண்டிப்பாக நிறைவேற்றுவார்கள்.
‌3. கன்னி – புதன் கிரகத்தினால் ஆளப்படும் கன்னி ராசியினர் சின்ன சின்ன விஷயங்கள் கூட கவனித்து பார்க்கும் திறமை படைத்தவர்கள். இவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் இவர்களின் நம்பகமான பேச்சும் கன்னி ராசி பெண்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கிறது.
‌4. விருச்சிகம் – செவ்வாய் கிரகத்தால் ஆளப்படும் விருச்சிக ராசி பெண்கள் அசைக்க முடியாத விசுவாசம் மற்றும் எதிலும் தீவிரமாக செயல்படுவது போன்ற குணங்களைக் கொண்டவர்கள். விருச்சிக ராசி பெண்கள் ஒரு விஷயத்தில் உறுதி அளித்தால் அதை நீங்கள் கண்மூடித்தனமாக நம்பலாம். அந்த அளவிற்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவார்கள். மேலே குறிப்பிட்ட நான்கு ராசியின பெண்களும் தங்களது காதல், குடும்பம், திருமண உறவு என எதுவாயினும் வாக்குறுதியை காப்பாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பதால் இவர்களின் வாழ்க்கை துணை மிகவும் அதிர்ஷ்டசாலி என்று ஜோதிடத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

English summary : astrology news about trustworthy zodiac signs

Read more :தினமும் ஒரே மாதிரி ரசம் செய்யாமல், கொஞ்சம் வித்தியாசமாக கேரளா ஸ்டைல் தேங்காய் பால் ரசம் செய்து பாருங்கள்.!?

Baskar

Next Post

Doctor | நோயாளிகளே நோட் பண்ணிக்கோங்க..!! இனி மருத்துவர்கள் இப்படி செய்தால்..!! அரசு அதிரடி உத்தரவு..!!

Thu Feb 22 , 2024
தமிழ்நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் புரியும்படி பெரிய எழுத்துகள் அதாவது, CAPTAL எழுத்துகளில் தான் மருந்துகள் பெயர்களை எழுதித் தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுவாக உடல் நிலை சரியில்லை என்று மருத்துவரிம் போனால் அவர்கள் நம்மைப் பரிசோதனை செய்துவிட்டு மருந்துகளை எழுதித் தருவார்கள். ஆனால், பெரும்பாலான நேரம் அவர்கள் எழுதித் தரும் மருந்துகளைப் பார்த்தாலே நமக்குத் தலைச் சுற்றிவிடும். அந்தளவுக்குத் தான் மருத்துவரின் கையெழுத்து இருக்கும். பெரும்பாலான […]

You May Like