அடுத்த ஆபத்து.. குழந்தைகளிடையே வேகமாக பரவும் அடினோவைரஸ்.. என்னென்ன அறிகுறிகள்..?

மேற்கு வங்கத்தில் குழந்தைகளிடையே புதிய வகை நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர்..

சமீபகாலமாகவே பல்வேறு புதுப்புது வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றன.. அந்த வகையில் தற்போது மேற்குவங்கத்தில் அடினோவைரஸ் என்ற பாதிப்பு பரவி வருகிறது.. அடினோவைரஸ்கள் என்பது நமது நரம்பு மண்டலம், குடல், சிறுநீர் பாதை, கண்கள் மற்றும் நுரையீரல் ஆகியவற்றை பாதிக்கும் வைரஸ் குழுவாகும். பெரியவர்களை விட குழந்தைகள் தான் இந்த வைரஸால் பாதிக்கப்படுகின்றனர். அடினோவைரஸ் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயாகும்.. குழந்தைகள் உள்ளிட்ட பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு இந்த வைரஸ் ஆபத்தானது.

98089532

பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் உட்பட நெருங்கிய தொடர்பு சூழல்களில் பரவலாக உள்ளது. இந்த வைரஸ் தோல் தொடர்புகள் மூலமாகவும், இருமல் மற்றும் தும்மல் மூலம் காற்று மூலமாகவும், பாதிக்கப்பட்ட நபரின் மலம் மூலமாகவும் பரவுகிறது. இதுவரை, வைரஸுக்கு சிகிச்சையளிக்க அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் அல்லது குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை.

மேற்குவங்கத்தில், அடினோவைரஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இறப்பு பற்றிய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மாநில சுகாதாரத் துறை இன்னும் தொகுக்கவில்லை என்றாலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மேற்குவங்க சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.. காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. குறிப்பாக இரண்டு வயது அல்லது அதற்குக் குறைவான குழந்தைகள் அடினோவைரஸால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால், கூடுதல் கவனம் தேவை என்று அறிவுறுத்தி உள்ளது..

அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ கடந்த இரண்டு வாரங்களில், அரசு நடத்தும் மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் நலப் பிரிவுகளில் குழந்தைகள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒப்புக்கொண்டார்.. இந்த மருத்துவமனைகளில் உள்ள பெரும்பாலான குழந்தை பராமரிப்பு பிரிவுகள் ஏற்கனவே நிரம்பி வழிகின்றன.. அங்குள்ள வென்டிலேட்டர்கள் கிட்டத்தட்ட 100 சதவீதம் பயன்பாட்டில் உள்ளன.. தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களில் குழந்தைகளுக்கான குழந்தை பராமரிப்பு பிரிவுகளில் இதேபோன்ற அவசர சேர்க்கைகள் பதிவாகியுள்ளன,” என்று தெரிவித்தார்.

அடினோவைரஸின் பொதுவான அறிகுறிகள்:

  • ஜலதோஷம், சுவாச பிரச்சனைகள்
  • காய்ச்சல்
  • தொண்டை வலி
  • நிமோனியா
  • காது தொற்று
  • கண்கள் இளஞ்சிவப்பு நிறமாக மாறுவது
  • வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் மற்றும் வயிற்று வலி போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகள்
  • மூச்சுக்குழாய் அழற்சி
  • சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள்

RUPA

Next Post

மக்களே கவனம்... நாளை மின் தடை...! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா...? முழு விவரம் இதோ...

Fri Feb 24 , 2023
சென்னையில் நாளை எந்த பகுதிகளில் மின் நிறுத்தம் என்பதை பார்க்கலாம். சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக பூந்தமல்லி, அம்பத்தூர் பகுதிகளில் மின் விநியோகம்நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேலும், மதியம் 2 மணிக்குள் பராமரிப்புப் பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழக்கம்போல வழங்கப்படும். அதன் படி, பூந்தமல்லி பகுதியில் உள்ள மணலி சரவணா நகர், […]
images 2023 02 24T051411.563

You May Like