சந்தைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் சர்ச்சையில் சிக்கினார்..!! பிளாஸ்டிக் தடையை மீறினாரா..? வைரல் வீடியோ

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காய்கறி வாங்கிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது பாதுகாவலர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பையில் காய்கறிகளை வைத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


நாடு முழுவதும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், அவற்றை உற்பத்தி செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தவிர்க்க தமிழக அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் தமிழ்நாட்டின் பெரும்பாலான கடைகளில் இன்று வரை பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில்தான் இருக்கின்றன. ஆங்காங்கே அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொண்டாலும், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு என்பது தடுக்க முடியாத அளவிலேயே இருந்து வருகிறது.

சந்தைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் சர்ச்சையில் சிக்கினார்..!! பிளாஸ்டிக் தடையை மீறினாரா..? வைரல் வீடியோ

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்துள்ளார். இதற்கிடையே, தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்திருந்தார். தற்போது, இந்த வீடியோவை பலரும் அதிகளவில் வைரலாக்கி வருகின்றனர். அதில், மயிலாப்பூர் சந்தையில் காய்கறி வாங்கி வியாபாரிகளுடன் பேசினார். அங்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்களுடனும் சிறிது நேரம் உரையாடிய நிர்மலா சீதாராமன், பாகற்காய், கருணை கிழங்கை பார்த்து பார்த்து வாங்கிச் சென்றார்.

சந்தைக்கு சென்ற நிர்மலா சீதாராமன் சர்ச்சையில் சிக்கினார்..!! பிளாஸ்டிக் தடையை மீறினாரா..? வைரல் வீடியோ

இந்நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மானுஷ் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நிர்மலா சீதாராமன் அருகில் இருக்கும் அவரது பாதுகாவலர் கையில் பாலிதீன் பையில் காய்கறிகள் உள்ளன. இதனை வட்டமிட்டு காட்டியுள்ள பியூஷ், ‘சென்னையில் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பைகளை நிர்மலா சீதாராமன் பயன்படுத்தியுள்ளார். இதற்காக அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறோம். இதற்கான அபராதத்தை அவரே செலுத்தினால் பாராட்டப்பட வேண்டியதாகும். இனி நிர்மலா சீதாராமன் துணி பையை எடுத்துச் செல்லுங்கள்’. என்று குறிப்பிட்டு உள்ளார்.

CHELLA

Next Post

உக்ரைனில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு ….பலர் உயிரிழந்திருக்ககூடும் என அச்சம்…

Mon Oct 10 , 2022
உக்ரைனில் மீண்டும் போர் தொடங்கியுள்ள நிலையில் அடுத்தடுத்து நடந்த பயங்கரமான குண்டுவெடிப்புகளில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது. உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் குண்டுவெடிப்புகள் நடந்துள்ளன. அடுத்தடுத்தடுத்து முக்கிய பகுதிகளில் குண்டுகள் வெடித்ததால் கார்கள் தீப்பிடித்து கொளுந்துவிட்டெரிந்தது. இது குறித்து கீவ் நகரத்தின் மேயர் விட்டாலி க்லிட்ச்கோ குண்டு வெடிப்பு பற்றி தெரிவித்துள்ளார். ’மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழமைவாய்ந்த நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பல்வேறு அரசு […]
ukrainewar5 1646162814

You May Like