திருமணம் என்பது ஒருவரின் வாழ்விலும் நடைபெறும் அழகான நிகழ்வு. ஆனால் அதற்கு பிறகு நடைபெறும் ஒரு சில கசப்பான சம்பவங்களால் அந்த திருமண வாழ்வே கசந்து போகும் அளவிற்கு இந்த வாழ்க்கை நம்மை கொண்டு சேர்த்து விடும்.
இன்றளவும் கிராமப்புறங்களில் திருமணம் நடைபெற்றால் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு காலத்தில் வேண்டுமானால் சாத்தியமாக இருந்திருக்கலாம், ஆனால் தற்போது அப்படி யாரும் திருமணம் நடைபெற்ற உடனே பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.
ஆனால் இதற்கு எதிரும் மாறாக ஒரு சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் ரவீந்திரன் இவருக்கு திருமணம் நடைபெற்று 6 வருடங்கள் ஆன பின்னரும் குழந்தைகள் இல்லை என்று சொல்லப்படுகிறது.
ஆகவே ரவீந்திரனுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
இந்த நிலையில் தான் திருமணம் நடைபெற்று 6️ வருடங்கள் ஆன சிலர் கூட குழந்தைகள் இல்லை என்ற ஆத்திரத்தில் தன்னுடைய மனைவியின் பிறப்புறுப்பில் பிளேடால் வெட்டி காயப்படுத்திய ரவீந்திரனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதாவது, திருமணம் நடைபெற்று 6️ வருடங்கள் ஆன பிறகும் குழந்தைகள் இல்லை என்ற கோபத்தில் தன்னுடைய மனைவியுடன் ரவீந்திரன் அடிக்கடி தகராறு செய்து கொண்டிருந்திருக்கிறார். இதன் காரணமாக, கோபமடைந்த அவருடைய மனைவி கணவருடன் கோபித்துக் கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 8️ மாத காலமாக அவர் தன்னுடைய தாய் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.
இதற்கு முன்பாகவே கணவன் மனைவி போல் இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது, அப்போதெல்லாம் தன்னுடைய மனைவி கோபித்துக் கொண்டு அவருடைய தாய் வீட்டிற்கு செல்வதும், அவரை சமாதானப்படுத்தி ரவீந்திரன் அழைத்து வருவதும் தொடர்கதையாக இருந்து வந்திருக்கிறது.
இதே போல தான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கணவன் மனைவிக்குள் குழந்தை இன்மை பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு அதனால் கடந்த 8️ மாதங்களுக்கு முன்னர் ரவீந்திரன் மனைவி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்று ஆங்கேயே வசித்து வந்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, ரவீந்திரன் வழக்கம் போல மீண்டும் தன்னுடைய மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் தான் கடந்த 25ஆம் தேதி ரவீந்திரன் தன்னுடைய மனைவியுடன் இயற்கைக்கு மாறான முறையில் உடலுறவு கொள்ள முயற்சித்து இருக்கிறார். இதற்கு அவருடைய மனைவி எதிர்ப்பு தெரிவிக்கவே, இதனால் கோபமடைந்த ரவீந்திரன் அவருடைய பிறப்புறுப்பில் பிளேடால் காயப்படுத்தி விட்டு அங்கிருந்து உடனடியாக தப்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் தான் ரவீந்திரன் மனைவியின் அவர்கள் சத்தம் கேட்டு அண்டை வீட்டார்கள் வந்து பார்த்தபோது பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்ட வலியில் அவர் துடித்துக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், ரவீந்திரன் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.