தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருவதால் ஒருவருக்கொருவர் கண்களை கண்களால் பார்த்துக்கொள்ளக் கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மெட்ராஸ் ஐ வேகமாக பரவி வருகின்றது. தினமும் ஆயிரக்கணக்கானோர் மெட்ராஸ் ஐ-ஆல் பாதிக்கப்படுகின்றார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்துளு்ளனர். எனவே கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகின்றது. எனவே காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் பரவி வருகின்றன. கண் அழற்சி என்ற மெட்ராஸ் ஐ தொற்று சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகின்றது. கண்கள் சிவந்த எரிச்சை ஏற்படத்தும். கண் விழி மற்றும் இமையை இணைக்கு சவ்வு படத்தில் சிவப்பு நிறமாக தோன்றி எரிச்சலையும் வலியையும் ஏற்படுத்தும். ஒளியை பார்த்தால் கூச்சம் ஏற்படும். கண்களில் நீர் வடிந்து கொண்டே இருக்கும். இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அது மெட்ராஸ் ஐ எனப்படுகின்றது.
இந்த வைரஸ் பெண்களின் கண்களை பார்த்தால் மட்டுமல்ல ஆண்களே ஆண்களின் கண்களை பார்த்தால் கூட தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதில்இருந்து தப்பிக்க கண்களை கண்களால் பார்க்க கூடாதுஎன்று அறிவுறுத்துகின்றனர். நோய் பாதிப்பவர்களின் அதிக அளவில்பள்ளி மாணவர்கள் அதிகம். எனவே கண்வலி ஏற்பட்டால் அவர்கள் கட்டாய விடுப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும் அறிகுறிகள் தென்பட்டால் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.