அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக செய்திகளை வெளியாகும் நிலையில், நான் என்ன செய்தாலும், ” எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என தனது அதிருப்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
உலக விருதுகளில் மிக உயரியது நோபல் பரிசு. மருத்துவம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் சாதனை படைத்தவர்களுக்கு இந்த நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. நார்வே நாட்டு நோபல் குழுவினர் இந்த பணியை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்படுகிறது
நடப்பாண்டில், அமைதிக்கான நோபல் பரிசு பெற அதிபர் டிரம்ப் முயற்சி செய்வதாக பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது, நான் என்ன செய்தாலும், ” எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது” என அதிபர் டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே, பல ஆண்டுகளாக நடந்து வரும், வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து, ஒரு அற்புதமான ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்துள்ளேன் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
ருவாண்டா மற்றும் காங்கோவின் பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டனில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்ரிக்காவிற்கு மட்டும் அல்ல, உலகிற்கும் ஒரு சிறந்த நாள். இதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. ரஷ்யா, உக்ரைன், இஸ்ரேல், ஈரான் உட்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. மக்களுக்கு நன்றாக தெரியும் என்று பதிவிட்டுள்ளார்.
Readmore: தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பந்த்!. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 359 ரன்கள் குவிப்பு!