”இனி இந்த பரிசோதனை கிடையாது”..!! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. இதனால், விமான நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டன. கொரோனா பரிசோதனை, முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவை பின்பற்றப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக சீனா உட்பட பிற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், கொரியா, ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இனி ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV D2 ராக்கெட்.. இஸ்ரோவுக்கு முதல் வெற்றி...

Fri Feb 10 , 2023
இந்தியாவில் முதன்முறையாக SSLV திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிறிய செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் SSLV D1 ராக்கெட்டை விண்ணில் ஏவியது.. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிடப்பட்ட இலக்கில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்படவில்லை. இதனால் மேம்படுத்தப்பட்ட SSLV D2 ரக ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்தது. இதற்கான பணிகள் நிறைவடைந்த நிலையில், SSLV ராக்கெட் […]

You May Like