உடல்நலம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், சீரான ஆரோக்கியத்தை நாடும் பலரும் புது புது உடற்பயிற்சி முறைகளை முயற்சி செய்து வருகின்றனர். இதில் அண்மைக் காலமாக உலகளவில் மற்றும் இந்திய நகரங்களில் அதிகமாக பேசப்படுவது நோர்டிக் நடைபயிற்சி.
முதலில் ஃபின்லாந்தில் கோடைக்கால பயிற்சியாக உருவான இந்த நடைபயிற்சி, தற்போது உலகம் முழுவதும் உள்ள அனைத்து வயதினரையும் கவர்ந்துள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டில் பயன்படுத்தப்படும் கம்பிகளைப் போலவே வடிவமைக்கப்பட்ட சிறப்பு கம்பிகள் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நடைபயிற்சி, பாரம்பரிய நடைப்பயிற்சியைவிட மிகவும் பயனுள்ளதாகவும், விரிவானதாகவும் கருதப்படுகிறது.
உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகையில், “இந்த பயிற்சியின் போது மேலதிக உறுப்புகள் ஒருங்கிணைந்து செயல்படுவதால், உடலின் 90% தசைகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான நடைப்பயிற்சியை விட இது 46% அதிக கலோரிகள் குறைக்க உதவுகிறது. மேலும், மூட்டுகளில் ஏற்படும் அழுத்தம் குறைவாக இருப்பதால், மூத்தோர்களுக்கும் இது ஏற்றதாக உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
தற்போது நகரப்பகுதிகளில் உள்ள பூங்காக்கள், நடைபாதைகள், ஓய்வு நேர கூட்டங்கள் போன்ற இடங்களில் நோர்டிக் நடைபயிற்சி மேற்கொள்வது ஒரு புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது. பொழுதுபோக்காகவும், உடற்பயிற்சி ஆர்வத்துடனும் இதை பலர் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் நோர்டிக் நடைபயிற்சி தொடர்பான காணொளிகள் வைரலாக பரவி வருகின்றன. அதில் பலர் இந்த பயிற்சியை எப்படி செய்ய வேண்டும், அதன் நன்மைகள் என்ன என்பதையும் எளிமையாக பகிர்ந்து வருகின்றனர்.
உடல் இயக்கச் சிகிச்சையாளர்கள் மற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர்களும், இந்த பயிற்சி ஒருங்கிணைப்பு, சமநிலை, மனஅழுத்தம் குறைப்பு ஆகியவற்றில் அதிகம் உதவுகின்றது என தெரிவிக்கின்றனர். மேலும், முதுமை பிரச்னைகள், முதுகுவலி, கணுக்கால் வலி போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக உள்ளது. உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல முடியாதவர்கள், வெளிப்புறத்தில் இயற்கையோடு இணைந்து ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள் ஆகியோருக்கான சிறந்த மாற்றுவழியாக நோர்டிக் நடைபயிற்சி அமைந்துள்ளது.
Read more: லட்டு பிரசாதத்தில் கரப்பான் பூச்சி.. பக்தர்கள் அதிர்ச்சி.. சர்ச்சையில் ஆந்திரா ஸ்ரீசைலம் கோயில்..!!