#திண்டுக்கல்: நாயைப் பேர் சொல்லி அழைக்காததால் ஏற்பட்ட விபரீதம்.. மரணத்தில் முடிந்த வாக்குவாதம்..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள தாடிக்கொம்பில் 65 வயது விவசாயியான ராயப்பனுக்கும் அவரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் டேனியல் மற்றும் வின்சென்ட் வளர்த்து வந்த நாய்களுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. 


இதற்கிடையில், டேனியல் மற்றும் வின்சென்ட் ஆகியோரின் செல்ல நாய் வழிப்போக்கர்களை பார்த்து அடிக்கடி குறைத்தும், கடிப்பது போலவும் நடந்து கொண்டிருக்கிறது.

இதனை பற்றி பலமுறை ராயப்பனிடம் புகார் அளித்து வந்துள்ளார். ஒருநாள் ராயப்பன் பக்கத்து வீட்டு நாய்களை பெயர் சொல்லி அழைக்க மறுத்ததால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

வாக்குவாதத்தில், நாய்களைத் தாக்குவதற்காக ராயப்பன் குச்சியை தேடியுள்ளனர். இதனை பார்த்து ஆத்திரமடைந்த வின்சென்ட் மற்றும் டேனியல் அவரை தாக்கியுள்ளனர். 

தாக்கியதில் ராயப்பன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டேனியல் மற்றும் வின்சென்ட் இருவரையும் தேடி வருகின்றனர். 

1newsnationuser5

Next Post

14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்தால்.. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு : அரசு அதிரடி முடிவு..

Mon Jan 23 , 2023
அசாம் மாநிலத்தில் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளை திருமணம் செய்யும் ஆண்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் “ அசாமில் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.. குழந்தை […]
Child Marriage 1

You May Like