கணவன் இறந்து கொஞ்ச நாள் கூட ஆகல.. 6 மாத கைக்குழந்தையை உயிரோடு எரித்த தாய்.. அடுத்தடுத்து நடந்த பகீர் சம்பவம்..!!

baby sucide

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, தெரணி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் நீலகண்டன். ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த கவிதா (23) என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்துக்கு பிறகு பனைமரத்தில் இருந்து தவறி விழுந்த நீலகண்டனின் முதுகுத்தண்டுவடம் கடுமையாக பாதிக்கப்பட்டது.


நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர் முதுகு தண்டுவட பிரச்சனையால் கடுமையாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது மனைவி கவிதா கர்ப்பமாக உள்ள நிலையில் அருகில் உள்ள தேவாளயத்திற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த நீலகண்டன் சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கணவரை இழந்த துக்கத்தில் கவிதா மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் கவிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது 6 மாதக் குழந்தையுடன், தனது அண்ணன் கலியபெருமாள் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, கணவர் உயிரை முடித்த அதே வீட்டிற்கு குழந்தையுடன் சென்ற கவிதா, தற்கொலை செய்த அறைக்குச் சென்று, தன்னையும், தன்னுடைய குழந்தையையும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்தனர். ஆனால், பலத்த தீக்காயங்களால் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குழந்தையை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தையும் உயிரிழந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி, வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more: ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல் பண்ணை அமைக்க விருப்பமா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!! மானியமும் உண்டு..!!

English Summary

Not even a few days after her husband died.. Mother burned her 6-month-old baby alive.. The horrific incident that followed..!!

Next Post

அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு கப் போதும்..!! சங்குப்பூ தேநீர் குடிப்பதால் உடலில் நடக்கும் மாயாஜாலம்..!!

Tue Sep 16 , 2025
காலை எழுந்ததும் காஃபி அல்லது தேநீர் அருந்தும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், இந்த பானங்கள் சிலருக்கு வயிற்றின் அமிலத்தன்மை மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சிறந்த மாற்றாக, சங்குப்பூவில் இருந்து தயாரிக்கப்படும் ‘ப்ளூ டீ’ அல்லது ‘சங்குப்பூ தேநீர்’ உள்ளது. இது பார்ப்பதற்கு அழகாக இருப்பதுடன், பல ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு தருகிறது. சங்குப்பூ தேநீரின் பயன்கள் : மன அழுத்தத்தைக் குறைக்கும் : […]
Tea 2025

You May Like