இனி ரேஷன் அட்டை மூலம் இலவச மருத்துவ சிகிச்சை!… மத்திய அரசு முடிவு!

அந்தோதயா அட்டைதாரர்கள் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் ரேஷன் கார்டு மூலமாக பல சலுகைகளை பெற்று வருகிறார்கள். மேலும் இலவச ரேஷன் பொருட்களும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்தோதயா அட்டைதாரகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட உள்ளது. அதன்படி அந்தோதயா அட்டைதாரர்கள் இலவச சிகிச்சை அளிக்க ஆயுஷ்மான் அட்டைகள் தயாரிக்க உள்ளதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு சார்பில் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் மக்கள் இந்த வசதியை பெறுவதற்கு பல மையங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ரேஷன் கார்டை காட்டி பொது வசதி மையத்தில் ஆயுஷ்மான் கார்டிற்கு மக்கள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலமாக அவசர சமயங்களில் பயணங்கள் மருத்துவச் செலவுக்கு நிதி வழங்க அரசு அமல்படுத்திய ஒரு காப்பீடு திட்டமாக உள்ளது.

1newsnationuser3

Next Post

கல் உப்பை விட சிறிய பை!... ஆன்லைனில் ரூ.51 லட்சத்திற்கு ஏலம்!... இதுல இப்படி ஒரு ஸ்பெஷலா?

Mon Jul 3 , 2023
உப்பு கல்லை விட மிக சிறிய அளவிலான பை ஆன்லைன் ஏலத்தில் 51 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் எதற்கெடுத்தாலும் ஆன்லைன் என்ற நிலை உருவாகியுள்ளது. அந்தவகையில் நேரடியாக ஏலம் நடத்தப்படுவது மட்டுமின்றி ஆன்லைனிலும் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. விலை உயர்ந்த பொருள்கள் முதல் அரிய வகை பொக்கிஷங்கள் வரை பல பொருள்கள் ஏலம் விடப்படுகின்றன. ஃப்ளோரசண்ட் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் […]
small salt bag

You May Like