மேட்ரிமோனியில் சிக்கிய முதியவருடன் நிர்வாண வீடியோ கால்..!! ரூ.60 லட்சத்தை அபேஸ் செய்த பெண்..!!

மனைவியை இழந்து தனிமையில் வசித்து வரும் 65 வயது முதியவர் ஒருவர், மறுமணம் செய்துகொள்ள விரும்பி மேட்ரிமோனியில் பதிவு செய்திருக்கிறார். அவரிடம் ஒரு பெண் உரையாட முன்வந்திருக்கிறார். இதையடுத்து, இருவரும் மொபைல் எண்களைப் பகிர்ந்துகொண்டு பேச ஆரம்பித்துள்ளனர். பின், ஒருநாள் இருவரும் வீடியோ காலில் பேசியுள்ளனர். அப்போது அந்தப் பெண் தனது ஆடைகளை களைந்து ஆபாசமாக பேசியிருக்கிறார். முதியவரையும் ஆடைகளைக் கழற்ற சொல்லியிருக்கிறார். பிறகு, அந்த முதியவர் ஆடை இல்லாமல் பேசுவதை அந்த பெண் ரகசியமாக ரெக்கார்டு செய்துள்ளார். இதையடுத்து, அந்த வீடியோவைக் காட்டி அந்த முதியவரை மிரட்டியுள்ளார். தான் கேட்கும்போது பணம் கொடுக்காவிட்டால் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாகவும் முதியவரின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் அனுப்புவதாகவும் மிரட்டி இருக்கிறார்.


அந்தப் பெண்ணின் தொடர் அச்சறுத்தலுக்கு பயந்து அவ்வப்போது பணம் கொடுத்து வந்துள்ளார் முதியவர். ஒருகட்டத்தில் ரூ.60 லட்சத்தை இழந்த முதியவர், மன உளைச்சலுக்கு ஆளாகி, சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கியுள்ள சைபர் க்ரைம் காவல்துறையினர், முதியவர் பணம் செலுத்திய வங்கிக் கணக்கு விவரம், பெண்ணின் மொபைல் எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் பறித்த பெண்ணைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.

CHELLA

Next Post

தென்காசி அருகே பரபரப்பு: காதல் மனைவியை தெரு தெருவாக ஓடவிட்டு கொன்ற லாரி டிரைவர் கைது!

Mon Feb 13 , 2023
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சார்ந்த லாரி டிரைவர் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிக் கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் நகரை சார்ந்தவர் கண்ணன் இவர் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சுமதி இவர்கள் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சாதிவிட்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்த […]
WhatsApp Image 2023 02 13 at 7.04.40 PM

You May Like