குனிந்து வேலை செய்த இளைஞர்! விளையாட்டாக ஆசனவாயில் வைத்து அடித்த காற்று! சற்று நேரத்தில் நடந்த சோகம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் என்னை சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றி வந்த ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை அதிர்ச்சியும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அவருடன் பணியாற்றி வந்த ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர்வைசர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சென்னையை அடுத்த ஆலம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த சௌமியா பிரியரஞ்சன் என்ற இளைஞர் பணியாற்றி வந்தார். இன்றைய பணியின் போது இவர் குனிந்தவாறு தொழிற்சாலைகளில் இருக்கும் இயந்திர பாகங்களை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த சூப்பர்வைசரான சாய் ராகவா என்ற இளைஞர் விளையாட்டாக காற்று அடிக்கும் கம்ப்ரஸரை பிரியரஞ்சனின் ஆசனவாயில் வைத்து விளையாட்டாக அழுத்தி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக அதிவேகமான காற்று அவரது வயிற்றுக்குள் சென்றுள்ளது .


இதனால் வயிற்று வலியால் துடித்து சுருண்டு விழுந்துள்ளார் சௌமியா பிரியரஞ்சன். இதனைத் தொடர்ந்து உடன் வேலை செய்யும் நபர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்ததாக தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை சூப்பர்வைசர் சாய் ராகவாவை கைது செய்தது. இறந்த சௌமியா பிரிய ரஞ்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

1newsnationuser5

Next Post

புற்றுநோய் முதல் சரும பொலிவு வரை அனைத்துக்கும் தீர்வு!... சாத்துக்குடியின் நன்மைகள் இதோ!

Tue Mar 21 , 2023
மொசாம்பியா எனப்படும் சாத்துக்குடியில் புற்றுநோயைத் தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளைக் கொண்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்து சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கோடைக்காலத்தில் அதிக உடல் சூட்டைக் குறைக்க அதிகளவில் சாத்துக்குடியை அனைவரும் சாப்பிட்டு வருகிறோம். சாத்துக்குடி பழங்களைத் தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும் போது சரும பிரச்சனைக்கு தீர்வாக அமைகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, கொலாஜனை உற்பத்தி செய்வதற்கு உதவியாக உள்ளது. எனவே சருமத்தை […]
sweet lemon

You May Like