மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.
இவரது வீட்டிற்கு அருகில் உள்ள 35 வயதுடைய நபர் ஒருவர் குழந்தையை தினமும் கண்காணித்து வந்துள்ளார். யார் வீட்டில் இருக்கின்றனர் என்று நோட்டம் செய்துள்ளார்.
ஒரு நாள், குழந்தையின் பெற்றோர் வெளியே சென்றபோது, அந்த நபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருப்பதை பார்த்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலிசார் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டுக்காரர் தான் குழந்தையை பலாத்காரம் செய்தது உறுதியானது. அதன் பிறகு, போகோ சட்டத்தின் கீழ் எண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.