குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக கவலைக்கிடமாக அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். உடல் மற்றும் மன ரீதியில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய இந்தக் குற்றங்கள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பாதுகாப்பு உணர்வு, தன்னம்பிக்கை மற்றும் மனநலத்தில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, குழந்தைகளுக்கு “நல்ல தொடுதல் – கெட்ட தொடுதல்” (Good Touch, Bad Touch) குறித்து வயதுக்கு ஏற்ற முறையில் […]

ராமநாதபுரத்தில் தந்தையை இழந்த சிறுமி ஒருவரை, அவரது சொந்த தாத்தாவே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அவர் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் தனது மனைவி மற்றும் மகளுடன் மூவலூர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவர் உயிரிழந்த நிலையில், தற்போது இவரது மனைவி மற்றும் 15 வயது மகள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வந்துள்ளனர். […]

குழந்தைகளை வளர்ப்பது என்பது அவர்களுக்கு உணவு, கல்வி, ஒழுக்கம் ஆகியவற்றை மட்டும் கற்றுக் கொடுப்பது அல்ல. எந்த சூழ்நிலையிலும் தங்களுக்கு நேரும் பிரச்சினைகள், அச்சம் அல்லது துன்புறுத்தல்கள் குறித்து தயக்கமின்றி பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களிடம் உருவாக்க வேண்டும். குழந்தைகள் மனம் திறந்து பேசும் சூழலை பெற்றோர் ஏற்படுத்தினால், பல துயர சம்பவங்களை ஆரம்பத்திலேயே தடுக்க முடியும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர், தனக்கு […]