தூத்துக்குடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் சொந்த அண்ணனே தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் சிலா நத்தம் பகுதியைச் சார்ந்தவர் நல்லதம்பி லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர். அந்த விளையாட்டின் மூலம் பல லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். தனது அண்ணனான முத்துராஜ் என்பவரிடம் போய் காரணங்களை கூறி மூன்று லட்ச ரூபாய் வரை பணம் வாங்கி அவற்றை ஆன்லைன் ரம்மியில் இழந்துள்ளார். இது தொடர்பாக தனது தம்பியிடம் கொடுத்த பணத்தை கேட்டிருக்கிறார் முத்துராஜ்.
பூர்வீக வீட்டை விட்டு அதில் பேலன்ஸ் செலுத்த வேண்டிய தொகையை எடுத்துக் கொள்ளும்படி அண்ணனிடம் கூறி இருக்கிறார் நல்ல தம்பி. பூர்வீக வீட்டைக் காரணம் கொண்டும் விற்க முடியாது என தெரிவித்த அண்ணன் தன்னிடம் வாங்கிய பணத்தை வைத்து என்ன செய்தாய் என காரணம் கேட்டு உள்ளார். இது தொடர்பாக இருவருடைய கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பின்னர் தனது தம்பியை அங்குள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்திருக்கிறார் அண்ணன். நேற்று மாலை கொலை நடந்த நிலையில் இன்று காலை காவல்துறையில் சென்று சரணடைந்துள்ளார் அண்ணன் முத்துராஜ். அவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் நல்லதம்பி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் அண்ணனே தம்பியை அடித்து கொலை செய்த சம்பவம் அப்போகுதியில் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .