தமிழக மின் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரோத பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை கைது செய்தனர். இதனை தொடர்ந்து, அவருக்கு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே பரிசோதனை செய்யப்பட்டதில் இதயத்தின் அடைப்பு இருப்பதாகவும் உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையினர் கோரிக்கையை வைத்ததன் பேரில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை ஜூன் மாதம் 28ஆம் தேதி வரையில் நீதிமன்ற காவல் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் தான் நீதிமன்ற காவலையை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி இன்று காலை செய்தார்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்ததற்கு குடும்பத்தினருக்கு மட்டும் தான் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மற்றபடி அரசியல் தலைவர்களோ அல்லது அரசியலுக்கு சம்பந்தப்பட்டவர்களோ அவரை சந்திப்பதற்கு புழல் சிறை நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் செந்தில் பாலாஜி பார்ப்பதற்காக வந்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு அனுமதி வழங்கப்படாததால் அவர் மருத்துவர்களிடம் உடல் நலன் தொடர்பாக விசாரித்து சென்றார் என்று கூறப்படுகிறது.