கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்தி வந்த செல்போனை ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.இதற்கு காரணம் பள்ளி நிர்வாகம் எனக்கூறி பெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து 2 மாதங்களுக்கும் மேலாக பள்ளியை திறக்காமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சாவில் மர்மம் இருப்பதாக ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் புகார் கூறப்பட்டது எனவே விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்கப்பட்டது. இந்நிலையில் கடந்த முறை கோர்ட்டில் வழக்கு வந்தபோது ஸ்ரீமதியின் பெற்றோர் செல்போனை தரவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிமன்றம் உரிய விசாரணை நடத்தவும் பெற்றோர் செல்போனை ஒப்படைக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற்ம தெரிவித்துள்ளது. மாணவி ஸ்ரீமதி பள்ளிக்கூடத்தில் 3வது மாடியில் இருந்து விழுந்து கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.
மாணவி ஸ்ரீமதி சீருடை அணிந்த நிலையில் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளிக்கூட காவலாளி பள்ளி நிர்வாகம் மற்றும் சின்னசேலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாணவி ஸ்ரீமதி விடுதி அமைந்துள்ள 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கை பல்வேறு தரப்பினர்கோரிக்கையை ஏற்று சி.பி.சி.ஐ.டி. விசாரித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.