கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் பெற்றோரே பணத்திற்காக தங்கள் மகளை வெளிநாட்டில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மல்லேனஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) மற்றும் அவரது மனைவி கிராந்தி (48) ஆகியோர் ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்வதே இவர்களின் தொழிலாகும். இதன் […]
parents
பொதுவாகவே, நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் நிலைக்கும். ஆனால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அந்தப் பணம் நீண்ட நாட்கள் நம்மிடம் நிலைக்காது. சில நேரங்களில், அப்படிப்பட்ட ஆசையே நம் வாழ்க்கையை சீரழித்துவிடும். அதற்கு உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. புச்சிரெட்டிபாலத்தில் வேளாண்மை அதிகாரியாக வேலை செய்து வரும் இவருக்கு லாவண்யா […]
தேர்வு காலம் வந்துவிட்டாலே, பல மாணவர்கள் சந்திக்கும் இரண்டு முக்கியமான சவால்கள் கவனம் சிதறுவதும், படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவதும்தான். புத்தகத்தை முன் வைத்து மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாலும், மனம் வேறு எண்ணங்களில் அலைபாயும் சூழல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் பலரிடம் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலுக்கு உடற்பயிற்சி […]
தெலங்கானா மாநிலம், சூர்யபேட்டையை சேர்ந்தவர் நகிரிகாந்தி ரவி. லாரி ஓட்டுநரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு, 5 வயதான தனுஷ் மற்றும் 2 வயதான ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர்களின் வீட்டில் இருந்து அடிக்கடி குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த […]
காதல் திருமணம் என்பது இன்னும் பல பெற்றோரால் வெறுக்கப்படும், ஏன் அருவருக்கப்படும் விஷயங்களில் ஒன்றாகவே இருந்து வருகிறது. காதலித்து திருமணம் செய்துகொண்ட தங்கள் பிள்ளைகளையே கொடூரமாகக் கொலை செய்யும் சம்பவங்களும் இந்த சமூகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதே நேரத்தில், காதல் திருமணம் செய்த தனது மகளின் காலில் விழுந்து கெஞ்சும் பெற்றோரைப் பார்க்கும் போது, அது பலரின் மனதையும் கலங்கச் செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி […]
குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற ஆசை எந்த பெற்றோருக்கும் இல்லாமல் இருக்காது. ஆனால் “ஆரோக்கியம்” என்ற பெயரில் சில சமயங்களில் நாம் அறியாமலேயே குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை உருவாக்கிவிடுகிறோம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. “நன்றாக சாப்பிட்டால் போதும்” என்ற எண்ணத்தில், எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொடுத்து விடுகிறோம். ஆனால் அது உண்மையில் குழந்தைகளுக்கு நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதன் விளைவாக, சில […]
சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான கொடூர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதில் சிலவற்றை தவிர்க்க முடியாதவையாக இருந்தாலும், பல நேரங்களில் பெற்றோரின் கவனக்குறைவினாலேயே குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என்று கூறலாம். அந்த வகையில், தற்போது டெல்லியில் நடந்துள்ள ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது பெற்றோர் தங்கள் குழந்தைகளை பராமரிக்கும் போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையையும் வழங்குகிறது டெல்லி வளர்ச்சி ஆணையம் சார்பில் கட்டப்பட்ட […]
பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாக்கும் வகையில், 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர அவர்களுக்கு மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கும் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். ஏற்றமிகு தமிழகத்தை உருவாக்க, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களது சீரான வளர்ச்சிக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. […]
சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மதிப்பெண் சான்றிதழ்கள், ஆவணங்கள் திருத்தம் ஆகியவை குறித்து வெளியாகும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அங்கீகாரம் இல்லாத நபர்கள் மற்றும் அமைப்புகள், சிபிஎஸ்இ குறித்து தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் விரைவாக திருத்தமோ, மாற்றமோ […]
மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களின் உடல்நிலையை கவனிக்க 30 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெற்றோர்களை கவனிக்க அரசு ஊழியர்கள் விடுப்பு எடுக்க ஏதேனும் வழிமுறை உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு, பதில் அளித்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 20 நாட்கள் அரைச் சம்பள விடுப்பு, 8 நாட்கள் தற்செயல் […]

