“இது ஏன்?”, “அது எப்படி?”, “நாம் எங்கே போறோம்?”, “அவர் ஏன் அப்படி செய்தார்?” என குழந்தை நாள் முழுவதும் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறதா? சில நேரங்களில் இது பெற்றோருக்கு சலிப்பாகத் தோன்றலாம். ஆனால், குழந்தையின் இந்த கேள்வி கேட்கும் பழக்கத்தை உடனே தடுக்காமல், அதன் பின்னால் இருக்கும் ஆர்வத்தை புரிந்துகொள்வது முக்கியம். சிறு வயதில் குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு தெரியாத விஷயங்களை […]
parents
குழந்தைகள் தங்களுடைய மனதில் இருக்கும் விஷயங்களை பெரியவர்களைப் போல தெளிவாக வெளிப்படுத்த முடியாமல் இருக்கலாம். குறிப்பாக சிறு வயதில், அவர்களுக்கு ஏற்படும் கவலை, பயம், கோபம், ஏமாற்றம் அல்லது சோர்வு போன்ற உணர்வுகளை சில வார்த்தைகள் மற்றும் நடத்தைகள் மூலமாகவே வெளிப்படுத்துவார்கள். அதனால் குழந்தைகள் தொடர்ந்து கூறும் சில வார்த்தைகளை பெற்றோர்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், அதன் பின்னால் இருக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்வது முக்கியம். குறிப்பாக குழந்தை அடிக்கடி […]
நள்ளிரவில் பாலத்தின் மீது தனியாக அமர்ந்து அழுது கொண்டிருந்த 3 வயது குழந்தையை பார்த்த பொதுமக்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தையின் பெற்றோர் இருவரையும் காணவில்லை. தகவலறிந்து அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்ட நிலையில், அவர்களைத் தேடியபோதுதான் கோதாவரி ஆற்றில் தம்பதியினர் குதித்தது தெரியவந்தது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. சாய் – சிரீஷா தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. […]
மனஅழுத்தம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் சிறிய கருத்து வேறுபாடுகள் கூட சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகனின் பிடிவாதத்தை சமாதானப்படுத்தச் சென்ற பெற்றோர், அவரைக் காப்பாற்ற முயன்றபோது உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் தேவ்லாய் பகுதியைச் சேர்ந்த முரளிதர் சந்த்குடே மற்றும் அவரது மனைவி சங்கீதாவுக்கு 19 வயதில் குணால் என்ற மகன் இருந்தார். குணால் புதிய செல்போன் வாங்கித் தருமாறு […]
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் 43 வயது நபர் ஒருவர் தனது பெற்றோரையே இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்துவதற்காக பணம் கேட்டு ஏற்பட்ட தகராறே இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமாக இருந்ததாக போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. நெடுங்கண்டம் அருகே ஏழுக்கம் வயல் பகுதியில் சந்திரன் (55), அவரது மனைவி வல்சம்மா (50) ஆகியோர் வசித்து வந்தனர். விவசாயப் பணியில் ஈடுபட்டு வந்த […]
இன்றைய காலத்தில் செல்போன் பயன்பாடு மாணவர்களின் வாழ்க்கையில் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே செல்போன் பயன்பாட்டை மையமாகக் கொண்ட கருத்து வேறுபாடுகளும் அதிகமாகி வருகின்றன. கண்டிப்பது அவசியம் என்றாலும், குழந்தைகளின் மனநிலையையும் புரிந்துகொண்டு பொறுமையாக பேசுவது மிகவும் முக்கியம். சிறிய பிரச்சினையாக தோன்றும் விஷயங்கள் கூட, சில நேரங்களில் எதிர்பாராத சோகமான முடிவுகளுக்கு வழிவகுக்கலாம். இதுபோன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. […]
குமரி மாவட்டம் ஆற்றூர் பகுதியை சார்ந்தவர் 19 வயதான நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் கணவரின் விவரம் குறித்து கேட்டதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் இது குறித்து […]
கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் பெற்றோரே பணத்திற்காக தங்கள் மகளை வெளிநாட்டில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்றதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். மல்லேனஹள்ளி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (50) மற்றும் அவரது மனைவி கிராந்தி (48) ஆகியோர் ஹக்கி-பிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். வனப்பகுதிகளில் கிடைக்கும் அரிய மூலிகைகளை சேகரித்து விற்பனை செய்வதே இவர்களின் தொழிலாகும். இதன் […]
பொதுவாகவே, நாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணம்தான் நிலைக்கும். ஆனால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்தால், அந்தப் பணம் நீண்ட நாட்கள் நம்மிடம் நிலைக்காது. சில நேரங்களில், அப்படிப்பட்ட ஆசையே நம் வாழ்க்கையை சீரழித்துவிடும். அதற்கு உதாரணமாக, ஆந்திர மாநிலத்தில் நடந்த ஒரு கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீஹரி. புச்சிரெட்டிபாலத்தில் வேளாண்மை அதிகாரியாக வேலை செய்து வரும் இவருக்கு லாவண்யா […]
தேர்வு காலம் வந்துவிட்டாலே, பல மாணவர்கள் சந்திக்கும் இரண்டு முக்கியமான சவால்கள் கவனம் சிதறுவதும், படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாமல் போவதும்தான். புத்தகத்தை முன் வைத்து மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாலும், மனம் வேறு எண்ணங்களில் அலைபாயும் சூழல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்த பிறகு, நீண்ட நேரம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தும் திறன் பலரிடம் குறைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உடலுக்கு உடற்பயிற்சி […]

