”எங்களது ஆதரவு இந்த வேட்பாளருக்கே”..!! டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பு..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் அமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து வெறுமனே 10,000 வாக்குகள் கூடுதலாக பெற முடியுமே தவிர அவர்களால் வெற்றி பெற முடியாது. குக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்பதால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் நிர்பந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை இரட்டை இலை சின்னம் அதன் செல்வாக்கை இழக்கும். இடைத்தேர்தலில் திமுகவுக்கும் வாக்களிக்க மாட்டோம், அதிமுகவிற்கும் வாக்களிக்க மாட்டோம்.. யாருக்கு ஆதரவு என்பது குறித்து வரும் 12ஆம் தேதி முடிவு எடுக்கப்படும்.

திமுக நிதியிலிருந்து அறிவாலயத்திலோ அல்லது கலைஞரின் நினைவிடத்திலோ திமுகவினர் பேனா நினைவுச் சின்னம் அமைத்துக் கொள்ளட்டும். கடலில் அமைக்கும் போது தான் பிரச்சனைகள் வருகிறது. பேனா சிலையை உடைப்பேன் என்ற நிலை வருவதற்கு அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம்” என்றார்.

Chella

Next Post

மாதம் ரூ.71,000 சம்பளத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலை..!! இளைஞர்களே உடனே விண்ணப்பியுங்கள்..!!

Thu Feb 9 , 2023
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: சாலை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள்: இப்பணிக்கு 761 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: ஐடிஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பள விவரம்: ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். வயது வரம்பு: இப்பணிக்காக வயது […]

You May Like