பி.எம். கிசான் திட்டம்..!! 13-வது தவணை பெற இது அவசியம்..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

மத்திய அரசின் பி.எம். கிசான் திட்ட பயனாளிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணை பணம், வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணைத் தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி” திட்டமானது 2019இல் பிப்ரவரி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின்கீழ் இணைந்த பயனாளிகளுக்கு 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, 13-வது தவணைத் தொகையை ஜனவரி மாத இறுதியில் விடுவிப்பதற்காக மத்திய அரசு ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பி.எம். கிசான் திட்டம்..!! 13-வது தவணை பெற இது அவசியம்..!! தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு..!!

அதன்படி, பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே இந்த தவணைத் தொகை வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது. எனவே, பி.எம்.கிசான் வலைதளத்தில் ஆதார் எண்ணை (e-KYC) உறுதி செய்யாத பயனாளிகள் இருமுறைகளில் தங்களது ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். அருகிலுள்ள பொது சேவை மையத்திற்குச் சென்று, உங்கள் கைரேகையை பதிவு செய்தோ அல்லது தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே, பி.எம்.கிசான் வலைதளத்திற்கு சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசியில் பெறப்படும் 4 இலக்க எண்ணை (ஓடிபி) உள்ளீடு செய்தோ உங்களது ஆதார் எண்ணை உறுதி செய்திடலாம்.

மேலும், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து தகுதியுள்ள பயனாளிகளும் சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்குச் சென்று தங்களது வங்கிக்கணக்கோடு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இதுதொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குநரை அணுகலாம். மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள பி.எம். கிசான் திட்டத்தில் தமிழ்நாட்டு விவசாயிகள் அதிக எண்ணிக்கையில் பயன்பெற வேண்டும் என்பதற்காக வேளாண்மை-உழவர் நலத்துறை எடுத்துவரும் இம்முயற்சிக்கு இத்திட்டப் பயனாளிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அரசு கேட்டுக்கொள்கிறது”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHELLA

Next Post

எம்எல்ஏ-வின் ’கடுக்காய்’ கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த அமைச்சர்..!! பேரவையில் சிரிப்பலை..!!

Wed Jan 11 , 2023
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் விரிவாக பதிலளித்து வருகின்றனர். பரபரப்பாக அவையின் அலுவல்கள் நடைபெற்று வரும் நிலையில், திமுக எம்.எல்.ஏ உதய சூரியன் எழுப்பிய கேள்வியும் அதற்கு அமைச்சர் தெங்கம் தன்னரசு அளித்த பதிலும் சட்ட சபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. அந்த வகையில், திமுக எம்.எல்.ஏ. பேரவையில் எழுந்து கோரிக்கை ஒன்றை முன்வைத்தார். ”ஒரு பழமொழி சொல்வார்கள்.. காலையில் […]
எம்எல்ஏ-வின் ’கடுக்காய்’ கேள்விக்கு நச்சுனு பதில் கொடுத்த அமைச்சர்..!! பேரவையில் சிரிப்பலை..!!

You May Like