ரஷ்ய அதிபர் புதின் ஓய்வு பெற திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். 11 மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு முடிவடையவில்லை… ஆரம்பத்தில் ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றியது. ஆனாலும் உக்ரைன் சரணடையாமல் நேட்டோ நாடுகளின் உதவியுடன் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி வருகிறது.
இரு நாடுகளுக்கு இடையே ஏதோ போரை நிறுத்த உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில்.புதின் ஆற்றும் உரைகளை எழுதிக்கொடுக்கும் பொறுப்பிலிருந்தவரான Abbas Galloway என்பவர், புதின் தனது அதிபர் பதவியிலிருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். ஓய்வுக்குப் பின், கருங்கடலில் அமைந்திருக்கும், சகல வசதிகளுடன் கூடிய ரகசிய மாளிகையில் தனது கடைசிக்காலத்தை கழிக்க அதிபர் புதின் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளுடனான போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டுவரக்கூடிய ஒருவரை தனது வாரிசாக அறிவித்துவிட்டு ஓய்வு பெறுவார் என்றும் Abbas கூறியுள்ளார்.