பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், 9 தீவிரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் போர் நடந்தன. இதையடுத்து பதற்றம் அதிகரித்ததால் இருநாடுகளிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவின் 6 போர் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் […]

வியர்வை பொதுவானது. கோடைக்காலங்களில் உடலில் வரும் வியர்வை உடல் வெப்பநிலையை குளிர்ச்சியாக்க செய்கிறது என்பதை அறிவோம். ஆனால் அதீத வியர்வை என்பது ஹைப்பர் அஹிட்ரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இது அக்குள் மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் வியர்வையை உண்டு செய்யும். அக்குள் வியர்வை என்பது அதிக அசெளகரியத்தை உண்டு செய்யலாம். அது தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும் அதனுடன் வெளிவரும் துர்நாற்றம் மோசமானதாக இருக்கும் நிலையில் அக்குள் வியர்வை தவிர்ப்பதே நல்லது. […]

டீ குடிக்கும்போது வெறுமனே டீயை மட்டும் குடிக்காமல் அதோடு கூடவே இரண்டு பிஸ்கட் அல்லது ரஸ்க் முக்கி சாப்பிட்டால் டீ, ரஸ்க் ரெண்டுமே கொஞ்சம் சுவை கூடுதலாக இருப்பது போல தோன்றும். ஆனால் இந்த பழக்கம் உங்களுடைய ரத்த சர்க்கரை அளவு மற்றும் பிற உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நம்மில் பலருக்கும் டீ குடிக்கும்போது அதோடு கூடவே ஏதாவது ஸ்நாக்ஸ் சேர்த்து சாப்பிட்டே ஆக வேண்டும். […]

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கு உட்பட எந்த வழக்குகளிலும் அரசியல் தலையீடு இல்லை என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அனைவரும் அறிந்ததே. சம்பவம் நடந்த மறுநாள் கோட்டூர்புரம் போலீஸார் ஞானசேகரனைக் கைது செய்கிறார்கள். பின்னர் அன்று மாலை விடுவிக்கிறார்கள். அதன்பிறகு, டிசம்பர் 25-ம் தேதி ஞானசேகரனை போலீஸார் மீண்டும் கைது […]

உலகளவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வெள்ளை அரிசியை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஜப்பானியர்கள் வெள்ளை அரிசியை தங்கள் உணவின் மிக முக்கிய பகுதியாக உட்கொண்டு வருகின்றனர். வெள்ளை அரிசியை அதிகளவு பாலிஷ் செய்வதால் அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் இழக்கப்படுகிறது. வெள்ளை அரிசியில் அதன் தவிடு மற்றும் கிருமி நீக்கப்பட்டு எண்டோஸ்பெர்ம் மட்டும் காணப்படுகிறது. இது சுவையை மேம்படுத்தவும், ஆயுளை நீட்டுக்கவும், சமையல் பண்புகளை மேம்படுத்தவும் உதவுகிறது. […]

கணவர் இறந்துவிட்டாலும், ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் உரிமையாக பாதுகாப்பான தங்குமிடத்தை அங்கீகரிக்கும் வகையில், மனைவியை அவரது திருமண வீட்டிலேயே வசிக்க அனுமதியளித்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு கணவர் இறந்த பிறகும், அந்தப் பெண்ணும் அவரது குழந்தையும் கணவரின் வீட்டிலேயே வசித்து வந்தனர். இருப்பினும், அவரது கணவரின் தாயார் மற்றும் உடன்பிறந்தவர்கள் தொடர்ந்து அவரைத் துன்புறுத்தத் தொடங்கியதால், அவர் பாதுகாப்பு கோரி பாலக்காடு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை […]

ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை பகுதியில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில், அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய விஸ்வரூபம் காணப்படும் ஒரே தலம் இதுவாகும். பொதுவாக முருகப்பெருமான் பெரும்பாலான தலங்களில் ஒற்றை முகத்துடன், சில இடங்களில் மட்டும் இரு அல்லது மூன்று முகங்களுடன் காட்சி தருவார். ஆனால் குண்டுக்கரையில், மிகவும் விசித்திரமாக, […]

நம்மில் பல பேர் இந்த தவறை செய்வது உண்டு. தூங்கும் போது கூட விளக்குகளை போட்டுக் கொண்டு தூங்குவது உண்டு. ஆனால் உண்மையில் ஒளியானது தூக்கத்தில் ஆழமான தாக்கத்தை உண்டாக்குகிறது. தூங்குவதற்கு இருள் என்பது மிகவும் அவசியம். இருட்டாக இருக்கும் போது உங்கள் உடல் சமிக்ஞைகளை அனுப்பி தூக்கத்தை தூண்டுகிறது. அதிக வெளிச்சத்தில் தூங்குபவர்களுக்கு உடல் பருமன், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் நலப் பாதிப்புகள் […]

வீட்டிற்கு வாங்கி வரும் மல்லிகைப் பூக்களை ஃபிரிட்ஜ் இல்லாமல் எப்படி ஸ்டோர் செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். மலர்களிலேயே மல்லிகையின் வாசம் தனித்துவமானது. அதேபோல், பெண்கள் பலருக்கும் பிடித்த பூ என்றால், அது மல்லிகை தான். ஏன், சில ஆண்களுக்கும் கூட மல்லிகைப்பூ என்றால் பிடிக்கும். வீட்டுக்கு மல்லிகைப் பூ வாங்கி வந்தால், அதை பலரும் ஃபிரிட்ஜில் வைப்பார்கள். ஆனால், அப்படி வைக்கும்போது, அதிகப்படியான கூலிங்கால், […]

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஜூன் 6ஆம் தேதி வெளியாகலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி நிர்ணயம் செய்யப்படும். இதைத்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கிறோம். இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கான வட்டியை நிர்ணயிக்கும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டியும் உயரும், கட்ட வேண்டிய தொகையும் உயரும். இந்தாண்டில் […]