மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் நிதியாண்டு 2024-25 இல் 74.34 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள். நிதியாண்டு 2023-24 இல் இந்த எண்ணிக்கை 79.39 லட்சமாகவும், நிதியாண்டு 2022-23 இல் 75.79 லட்சமாகவும் இருந்தது.இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மத்திய […]
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் மழையால் பல மாவட்டங்களில் சாலை இணைப்பு, மின்சாரம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (SDMA)படி, 432 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 534 மின் விநியோக மின்மாற்றிகள் செயல்படவில்லை, மேலும் 197 நீர் வழங்கல் திட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேபோல், வெள்ளப்பெருக்கு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை […]
பொதுமக்களின் ரயில் பயணத்தை எளிதாக்குவதற்காக இந்திய ரயில்வே சமீபத்தில் பல மாற்றங்களைச் செய்துள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவுகள், காத்திருப்பு டிக்கெட்டுகள், முன்பதிவு கட்டணங்கள், தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இந்திய ரயில்வே ஒரு சிறப்பு சுற்றுலா தொகுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா தொகுப்பின் கீழ் ரயில் டிக்கெட்டின் கட்டணத்தை EMI மூலம் தவணைகளில் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உங்கள் ரயில் டிக்கெட்டுகளை […]
கோவை, தென்காசி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடக்கு ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் தாக்கத்தால் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய. லேசானது […]
மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளயப்பட்ச அமாவாசை, தை மாத அமாவாசை ஆகிய மூன்று அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில், தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால், ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் வந்து சேரும் […]
தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 புத்த மதத்தினர், 50 சமண மதத்தினர் மற்றும் 20 சீக்கிய மதத்தினர் இந்தியாவில் உள்ள அவரவர் மதங்களுக்கான புனித தலங்களுக்கு புனித பயணம் மேற்கொண்டவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.10000/- வீதம் 120 நபர்களுக்கு ரூபாய் 12 இலட்சம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் புத்த, சமண மற்றும் சீக்கிய மதத்தினரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து தமிழக அரசு […]
சாத்தான்குளம் வழக்கில் அப்ரூவராக மாறி உண்மையை சொல்கிறேன் என்று சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கடந்த 2020 ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு […]
அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; திமுகவின் வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற எண்ணத்தோடுதான் பல்வேறு புதிய கட்சிகளை, ஒவ்வொரு தேர்தலிலும் பாஜககளத்தில் இறக்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறது. இப்போதும் அந்த தந்திரத்தை பாஜகவினர் கையில் எடுத்து இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இவற்றை முறியடித்து திமுக வெற்றி பெறும். பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என்று சொன்ன […]
தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: மூளை சக்தியை அதிகரிப்பது முதல், செரிமானத்தை மேம்படுத்துவது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை, உங்கள் காலை உணவு வழக்கத்தில் சில ஊறவைத்த பாதாம் பருப்புகளைச் சேர்ப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தும். பாதாம் பருப்பு ஊட்டச்சத்துக்களின் ஒரு சக்தி வாய்ந்த களஞ்சியமாகும், மேலும் அவற்றை இரவு முழுவதும் ஊறவைப்பது உங்களுக்கு பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளைத் […]
தமிழகம் முழுவதும் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுதொடர்பாக பாமக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில்; தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள்விரோத, சமூகநீதிக்கு எதிரான முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் பாமக தலைவர் அன்புமணி வரும் 25-ம் […]

